தூத்துக்குடி : விளாத்திகுளம் அருகே தனது நிலத்தை ஒட்டி பட்டாசு ஆலை கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த விவசாயி, புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் தனது நிலத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள கைலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதுரகிரி (59). விவசாயம் செய்து வரும் சதுரகிரி நிலம் அருகே தனியார் பட்டாசு ஆலையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த தனியார் பட்டாசு நிறுவனம் தனது நிலத்திற்கு செல்லும் பாதையை மறித்து தனது நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மாசார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் நிலத்தினை அளவீடு செய்ய அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதையெடுத்து விவசாயி சதுரகிரி நிலத்தினை அளவீடு செய்து தர வருவாய் துறையில் மனு அளித்துள்ளார். இருந்து போதிலும் சதுரகிரி நிலத்தினை அளவீடு செய்ய காலதாமம் ஏற்பட்டதாக தெரிகிறது.
மேலும் தனியார் பட்டாசு ஆலை நிர்வாகம் நீதிமன்றம் மூலமாக நடவடிக்கைகள் மேற்க்கொண்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட விவசாயி சதுரகிரி இன்று தனது விவசாய நிலத்திலேயே கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து அவர் எழுதிய கைப்பாற்றியது மட்டுமின்றி, உடலை உடற்கூறாய்வுக்க அனுப்ப முயன்றனர். ஆனால் விவசாயி உடலை எடுக்க விடமால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயி சதுரகிரியின் நிலத்தை முறையாக அளந்து கொடுக்க வேண்டுமெனவும், தற்கொலைக்கு காரணமான பட்டாசு ஆலை நிறுத்தினரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தை தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தினை கைவிட்டனர். பின்னர் போலீசார் உயிரிழந்த விவசாயி சதுரகிரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.