திருச்சி அருகே விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில்- உடலை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் தாத்தையங்கார் பேட்டை அடுத்த கொழிஞ்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் தண்டன் மகன் செல்லத்துரை (50).
இவர் மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தவர். தனது மனநிலை பாதித்த சூழ்நிலையில் பல்வேறு நபர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் செல்லத்துரை அவ்வழியாக வந்த கொழிஞ்சிப்பட்டியை சேர்ந்த பிச்சை மகன் துரைராஜ் (வயது 65) என்பவரை அரிவாளால் வெட்டியுள்ளார். அப்போது செல்லதுரையின் விரல்களும் வெட்டுப்பட்டது.
இதில் பலத்த காயமடைந்த துரைராஜ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதில் கொலை சம்பவத்தில் ஈடுப்பட்ட செல்லதுரையும் இறந்து கிடந்த துரைராஜ் அருகிலேயே மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தா. பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த தாபட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துரைராஜ் சடலத்தை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து செல்லத்துரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தா. பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.