புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஈச்சம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னத்துரை (27). இவர் ஈச்சம்பட்டியிலிருந்து டீக்கடைக்கு செல்வதற்காக ஈச்சம்பட்டியில் இருந்து கிளம்பி நகரப்பட்டிக்கு தனதூ இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார் .
அப்பொழுது திருமயத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ஆறுமுகம் என்பவர் ஓட்டி வந்த காரில் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த சின்னத்துரை சம்பவ இடத்திலேயே பலியானார்.
சம்பவ இடத்தில் பலியான சின்னத்துரைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் கவின் என்ற ஆண் குழந்தை மட்டுமே உள்ளது.
தந்தையை இழந்த ஒரு வயது குழந்தையின் முன்பு உறவினர்கள் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
இறந்த சின்னத்துரையின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.