Categories: தமிழகம்

திடீர் தற்கொலை செய்த தந்தை… வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி : நடந்த விபரீத சம்பவம்!!

சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குடும்ப சுமை மற்றும் பிரச்சனை காரணமாகவும் மேலும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டார்.

தனது தந்தையின் நினைவாகவே இருந்து வந்த கல்லூரி மாணவி கீர்த்தி தனது அம்மாவுடன் அதே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் கீர்த்தி சென்னை மாதவரத்தில் உள்ள அகர்சன் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கிரிமினாலஜி படித்து வந்த நிலையில் வழக்கம்போல் இன்று காலை கீர்த்தியின் அம்மா தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்று விட கீர்த்தி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்த கீர்த்தி யாரிடமும் சரிவர பேசவில்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து வீட்டில் இருந்த மின்விசிறியில் புடவைகளை கொண்டு தனக்குத்தானே தூக்கிட்டு தொங்கிய நிலையில் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதனை அடுத்து இவரை வழக்கமாக கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் இவரது ஆண் நண்பர் சாம் குமார் என்பவர் இன்று வந்து பார்த்தபோது கீர்த்தி வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக அருகில் இருந்தவர்களை துணைக் கொண்டு பாடியநல்லூர் ரீலா என்கின்ற தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரை மருத்துவர்களிடம் காண்பித்துள்ளனர்.

அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தகவல் அளிக்க இதனை அடுத்து இது குறித்து சென்னை செங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு தகவலை அடுத்து தனியார் மருத்துவமனைக்கு விரைந்து வந்த செங்குன்றம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்ப பிரச்சனையில் தந்தை இறந்த சோகத்தில் இளம் பெண் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

7 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

8 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

9 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

9 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

10 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

10 hours ago

This website uses cookies.