தூத்துக்குடி சின்ன கண்ணு புரத்தில் நண்பர்கள் மது அருந்தும் பொழுது தன்னை கொன்று விடுமாறு ஒருவர் கூறியதை தொடர்ந்து மற்றொருவர் அவர் தலையில் கல்லை போட்டு கொலை பரபரப்பு.
தூத்துக்குடி சின்ன கண்ணுபுரம் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தின் பின்பகுதியில் தனது நண்பர் ஒருவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு சிப்காட் காவல் நிலையத்திற்கு ஒருவர் தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் போலீசார் அங்கு இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் தூத்துக்குடி சின்ன கண்ணுபுரம் திருமணி என்பவரது மகன் மாரிமுத்து என்பதும் இறந்தவர் தூத்துக்குடி தேவர் காலனி பகுதியைச் சார்ந்த கொம்பையா மகன் பூல்பாண்டி என்பதும் தெரிய வந்தது.
இவர்கள் இருவரும் இன்று மதிய வேளையில் சின்ன கண்ணுபுரம் பகுதியில் உள்ள பழடைந்த கட்டிடத்தின் பின்பகுதியில் இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது பூல்பாண்டி தன்னை கொன்று விடுமாறு தனது நண்பர் மாரிமுத்துவிடம் தெரிவித்ததை தொடர்ந்து மது போதையில் இருந்த மாரிமுத்து பூல்பாண்டியன் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மாரிமுத்துவை கைது செய்த சிப்காட் போலீசார் அவரிடம் தொடர்ந்து சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
This website uses cookies.