திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பருவாய் பகுதியில் மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருபவர் செந்தில் குமார். இவர் அதே பகுதியில் ஸ்டேஷனரி ஸ்டோர் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தனது இரண்டு பெண் குழந்தைகள் நலனுக்காக முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வைப்பு தொகைக்கான பத்திர பதிவு செய்துள்ளார்.
இதற்காக பல்லடம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் பணிபுரியும் சமுக நலத்துறை மேம்பாட்டு அலுவலர் பசும்பொன் தேவியிடம் மனு அளித்துள்ளார். இதனையடுத்து பசும்பொன் தேவி பத்திரத்தை புதுப்பிக்க 3000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து செந்தில் குமார் சில தினங்களுக்கு முன்பு 1500 ரூபாய் ஆன்லைன் (கூகுள் பே) மூலமாக அளித்துள்ளார். மேலும் இன்று காலை மீதம் 1500 ரூபாய் தொகையை பல்லடம் பேருந்து நிலையத்தில் வைத்து கொடுத்துள்ளார்.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு செந்தில் குமார் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பசும்பொன் தேவி கையூட்டு பெறுவதை கையோடு பிடித்து கைது செய்தனர்.
மேலும் பசும்பொன் தேவியை பல்லடம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்திற்கு அழைத்து வந்து லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் சசிலேகா தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலமைச்சர் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பத்திர பதிவை புதுப்பிக்க வந்த செந்தில் குமாரிடம் 3000 ரூபாய் லஞ்சம் பெற்று சமூக நலத்துறை மேம்பாட்டு அலுவலர் கைதான சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.