Categories: தமிழகம்

விடுப்பில் சென்ற பெண் காவலர் வீட்டில் கழுத்தறுத்து கொலை… சாட்சியாக வந்த 5 வயது குழந்தை : குமரியில் ஷாக்!

குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே குளப்புறம் பகுதியை சேர்ந்தவர் மினி 42, தமிழக காவல்துறையில் கடந்த 2003ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவருக்கு திருமணமாகி 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது

பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த இவர் கடந்த 2021ம் ஆண்டு மார்த்தாண்டம் அனைத்து மகளீர் காவல்நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது மனநோயால் பாதிக்கப்பட்டு இதுநாள் வரை விடுப்பில் இருந்து வந்துள்ளார்.

இவரது கணவரும் மனநோய் பாதிக்கப்பட்டு வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார் இந்த நிலையில் இன்று காலை தூக்கத்தில் இருந்து எழும்பிய 5 வயது குழந்தை தாயார் கழுத்து அறுக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்களிடம் அழுதபடி போய் கூறி உள்ளார்.

இதனை கேட்ட அக்கம்பகத்தினர் ஓடி வந்து பார்த்து 108 ஆம்புலன்ஸ்க்கு அழைத்து உள்ளனர் தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் செவிலியர் காவலர் மினியை பரிசோதித்து பார்த்தபோது அவர் இறந்து விட்டதாக தெரிவித்து விட்டு களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு திரும்ப சென்றுள்ளார்

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர் அந்த நேரத்தில் இறந்த பெண் காவலரின் கணவர் வீட்டின் ஒரு ஓரத்தில் பிரம்மை பிடித்தது போல் இருப்பதை கண்டு சந்தேகமடைந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயை வரவழைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த மோப்ப நாய் வேறெங்கும் செல்லாமல் வீட்டை சுற்றியபடியே சிறிது நேரம் நின்றது அதே நேரத்தில் அவரது கணவரிடம் அந்த மோப்ப நாய் செல்லவில்லை இதனையடுத்து போலீசார் உயிரிழந்த பெண் காவலரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வீட்டில் இருக்கும் கணவரை போலீஸ் கண்காணிப்பில் வைத்துள்ளனர் மேலும் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனநோய் பாதிப்புக்குள்ளாகி விடுப்பில் இருந்த பெண் காவலர் மர்மமான முறையில் கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

AddThis Website Tools
Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தற்கொலை செய்ய துணிந்த மனோஜ்.. காப்பாற்றிய மனைவி : 8 வருடமாக பட்ட கஷ்டம்!

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே ஒரு மகனான மனோஜ் பாரதி ராஜா நேற்று திடீர் மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.…

51 minutes ago

போலீஸ் அனுப்பிய ‘அந்த’ வீடியோ.. சாலை மறியலில் மக்கள்.. 2 முறை காவலர் கைதானது ஏன்?

சென்னையில், பெண்ணுடன் நெருக்கமாக இருந்த புகைப்படம், வீடியோக்களை உறவினர்களுக்கு அனுப்பிய காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை: சென்னை மாநகரின் கோயம்பேடு…

2 hours ago

கத்தி முனையில் இளம்பெண் கற்பழிப்பு… வீடியோ எடுத்து மிரட்டல் : நண்பனுக்கும் விருந்தளித்த கொடூரம்!

கத்தி முடினையில் இளம்பெண்ணை கற்பழித்த போதை ஆசாமி வீடியோ எடுத்து மிரட்டி தொடர்ந்து டார்ச்சர் கொடுத்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…

2 hours ago

டிவியில் அதிக ஒலி எழுப்பியதால் விபரீதம்.. கோவை சுந்தராபுரத்தில் இளைஞர் படுகொலை!

கோவை சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு - ஈச்சனாரி சாலை சந்திப்பில் சிமெண்ட் மற்றும் கட்டிட பொருட்கள் விற்பனை கடை…

2 hours ago

கொண்டையை மறைந்த இரானி கொள்ளையர்கள்.. விமானத்துக்குள்ளே சென்று கைது.. செயின் பறிப்பு அரெஸ்ட் பின்னணி!

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்களை போலீசார் அடுத்தடுத்து கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.…

3 hours ago