பட்டாசு கடையில் ஏற்ட்ட திடீர் தீ விபத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி துரிதப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா உட்பட்ட செம்பட்டி வத்தலகுண்டு சாலையில் செம்பட்டி அருகே இந்து முன்னணி திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ஜெயராம் என்பவர் பல வருடங்களாக இப்பகுதியில் பட்டாசு கடை நடத்தி வருகிறார்.
மேலும் பட்டாசு கடையின் மேற்பகுதியில் ஜெயராம் தனது மனைவி ராணி உடன் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை சுமார் 5 மணி அளவில் திடீரென வீட்டின் கீழ் பகுதியில் இருந்த பட்டாசுகள் வெடிக்கத் துவங்கின.
இதை பார்த்த பொதுமக்கள் உடஅன செம்பட்டி காவல்துறைக்கும், ஆத்தூர் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
பொதுமக்கள் தகவலை அடுத்து உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இந்நிலையில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்ட நிலையில் கட்டிடங்கள் இடிந்து விழ தொடங்கியது.
தற்போது மேலே உள்ள கட்டிடம் முற்றிலுமாக இடிந்து விழுந்தது மேலும் வீட்டின் உட்பகுதியில் ஜெயராம் மற்றும் ராணி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வீடுகள் இடிந்து விழுவதன் காரணமாக கட்டிடங்களை அப்புறப்படுத்தினால் மட்டுமே வீட்டின் உள்ளே யாரும் இருக்கிறார்களா என்பது தெரியும் என தற்போது செம்பட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.