வெள்ளத்தில் மூழ்கிய வகுப்பறை… இதுக்கு ஒரு முடிவே இல்லையா? கல்வி கற்க முடியாமல் தவிக்கும் மாணவர்கள்!
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த நல்லாவூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடந்து இரண்டு தினங்களாக கன மழை பெய்து வருகிறது, கனமழை காரணமாக பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளது.
அந்த வகையில் நல்லாவூர் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் கல்வி பயிலும் வகுப்பறைகள் முழுவதும் மழைநீர் தேங்கி காணப்படுகிறது.
மழை காரணமாக நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பள்ளிக்குச் சென்ற மாணவ மாணவிகள் கல்வி பயில முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் இதுவரை மழை நீரை வெளியேற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அங்குள்ள பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில் மாண மனைவிகள் கல்வி கற்றால் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் எனவும் பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் இனிவரும் மழை காலங்களில் மழை நீர் தேங்கி நிற்காத அளவிற்கு பள்ளி கட்டிடங்களின் தரத்தை உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.