வெள்ளத்தில் மூழ்கிய வகுப்பறை… இதுக்கு ஒரு முடிவே இல்லையா? கல்வி கற்க முடியாமல் தவிக்கும் மாணவர்கள்!
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த நல்லாவூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடந்து இரண்டு தினங்களாக கன மழை பெய்து வருகிறது, கனமழை காரணமாக பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளது.
அந்த வகையில் நல்லாவூர் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் கல்வி பயிலும் வகுப்பறைகள் முழுவதும் மழைநீர் தேங்கி காணப்படுகிறது.
மழை காரணமாக நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பள்ளிக்குச் சென்ற மாணவ மாணவிகள் கல்வி பயில முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் இதுவரை மழை நீரை வெளியேற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அங்குள்ள பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில் மாண மனைவிகள் கல்வி கற்றால் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் எனவும் பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் இனிவரும் மழை காலங்களில் மழை நீர் தேங்கி நிற்காத அளவிற்கு பள்ளி கட்டிடங்களின் தரத்தை உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.