Categories: தமிழகம்

‘கலர் ஜெராக்ஸ் மிஷின் …கொஞ்சம் இங்க் போதும்’: வீட்டில் வைத்து கள்ளநோட்டு பிரிண்ட்…போலீசில் சிக்கிய கும்பலின் பின்னணி…!!

சென்னை: மணலி புதுநகரில் வீடு ஒன்றில் கலர் பிரிண்டர் மூலம் 200 ரூபாய் கள்ள நோட்டு புழக்கத்தில் விடுவதற்காக பிரிண்ட் செய்து வைத்திருந்த 12 லட்ச ரூபாய் பறிமுதல் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மணலி புதுநகரில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமாக ஆட்கள் தங்கியிருப்பதாக அக்கம்பக்கத்தினர் மணலி புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் அதிரடியாக வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு ஆறு பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளது.

உடனே அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது கட்டு கட்டாக 200 ரூபாய் நோட்டுகளும் அதன் பக்கத்திலேயே கலர் ஜெராக்ஸ் எடுக்கும் மிஷின்களும் இருந்தது தெரிந்தது. இதையடுத்து அங்கிருந்த அந்த ஆறு பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் மணலி புது நகரை சேர்ந்தவர் யுவராஜ் (37), மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த பிரபாகரன்( 33), புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர்இம்தியாஸ்(24), திருவொற்றியூர் தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜோசப் (31), வியாசர்பாடி சேர்ந்தவர் ரசூல்கான் (38), செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் முபாரக் (38) இவர்கள் 6 பேரும் நண்பர்கள்.

ரசூல்கான் ஆலோசனையின் பேரில் கள்ளநோட்டு தயாரிக்க யுவராஜ் மற்றும் சக நண்பர்கள் சேர்ந்து திட்டமிட்டனர். இதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மணலி புதுநகரில் உள்ள இந்த வீட்டை வாடகைக்கு எடுத்தனர். 2 கலர் ஜெராக்ஸ் மிஷின்கள் மற்றும் தரமான வெள்ளைக் காகிதத்தை வாங்கியுள்ளனர்.

அதனைக் கொண்டு 200 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து அதை புறநகர் பகுதிகளில் புழக்கத்தில் விட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று 200 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டு பிரிண்ட் செய்ய வேண்டுமென்று யுவராஜ் கூறியுள்ளார். அதற்கு 500 ரூபாய் நோட்டு ஜெராக்ஸ் எடுத்தால் போலீசாரிடம் சிக்கிக் கொள்வோம் என ரசூல் தெரிவித்துள்ளார்.

இதனால் யுவராஜ்க்கும் ரஸூலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அதை மற்றவர்கள் சமாதானம் செய்ய அங்கு இங்கும் நடமாடியதால் சந்தேகமடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அங்கு அச்சடித்து வைத்திருந்த‌ 12 லட்ச ரூபாய் கள்ள நோட்டுகள், ஜெராக்ஸ் மெஷின் மற்றும் வெள்ளை பேப்பர் பண்டல்கள், ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவர்களிடம் முழுமையாக விசாரித்தால் தான் எவ்வளவு கள்ளநோட்டு ரூபாய் புழக்கத்தில் விட்டார்கள், இவர்களுக்கு பின்னால் யார்,யார் இருக்கிறார்கள் என்பது குறித்து முழு விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

10 hours ago

ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…

11 hours ago

கோவைக்கு செங்கோட்டையன் திடீர் வருகை… சரமாரி கேள்வி எழுப்பிய நிருபர்கள் : மவுனம் கலையுமா?!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…

12 hours ago

தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?

திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…

12 hours ago

தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?

மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…

12 hours ago

மருமகனுடன் மாமியார் ஓட்டம்… மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்துடன் மாயம்!

உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…

14 hours ago

This website uses cookies.