ஆடு திருட சொகுசு காரில் உலா வரும் கும்பல்… கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் : ஷாக் சம்பவம்!!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வைரகோபுரம் பகுதியை சேர்ந்த அராபத் ( 28 ) , காரைக்குடி அருகே மஜா தோப்புதிடல் ஆறுமுகம் ( 52 ) , காரைக்குடி அருகே ஒத்தகடை செல்வராஜ் ( 55 ) ஆகிய மூவரும் இன்னோவா சொகுசு காரில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழபாலம் அடுத்த செங்குளம் மாரியம்மன் கோவில் தெரு பகுதிக்கு வந்தனர்.
அப்பகுதியில் இரண்டு ஆடுகளும் முத்துபேட்டை சாலையில் இரண்டு ஆடுகள் என மொத்தம் நான்கு ஆடுகளையும் திருடிக்கொண்டு கும்பகோணம் சாலையில் செல்வதற்காக அண்ணவாசல் சேனிய தெருவில் வந்துள்ளனர்.
அப்போது அப்பகுதியில் ஆடுகள் இருப்பதை கண்டு வாகனத்தை மெதுவாக சாலை ஓரம் கட்டியபோது அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்து வாகனத்தை சோதனையிட்டபோது சொகுசு வாகனத்தில் ஆடுகள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது .
உடனடியாக மன்னார்குடி டிஎஸ்பி அலுவலகத்திற்கு விபரத்தை தெரிய படுத்திய உடன் உடனடியாக வந்த காவல்துறையினர் மூவரையும் அழைத்து கொண்டு டிஎஸ்பி அஸ்வத் ஆண்டோ அந்தோணி முன்பு நிறுத்தபட்டு விசாரணை நடத்தினர்.
இதில் மூவரும் நான்கு ஆடுகள் திருடியதை ஒப்புகொண்டனர். விசாரணையில் மூவரின் பெயரிலும் தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது தெரியவந்தது .
மன்னார்குடி காவல்துறையினர் சொகுசு கார் மற்றும் நான்கு ஆடுகளையும் பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர் .
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.