நெல்லையில் சாலையில் ஸ்கூட்டியில் சென்ற மாணவியை மாடு முட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி: நெல்லையில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி, தனது இருசக்கர வாகனத்தில் (ஸ்கூட்டி) கல்லூரிக்குச் சென்றுள்ளார். அப்போது, நெல்லை தியாகராய நகர் அருகே மாடு ஒன்று திடீரென மாணவியின் இருசக்கர வாகனத்தில் மோதி உள்ளது.
இதனையடுத்து, அம்மாணவி கண்ணிமைக்கும் நேரத்தில் சற்று தொலைவில் தூக்கி வீசப்பட்டார். இந்த நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நெல்லை மாநகரப் பகுதிகளில் மாடுகளைக் கட்டுப்படுத்த பல்வேறு கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. அதிலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவரை மாடு முட்டியதில் பேருந்துக்குள் அந்த நபர் சிக்கி உயிரிழந்தார்.
இதையும் படிங்க: பதறியடித்து ஓடோடி வந்த மாஜி அமைச்சர் மகன்.. வீட்டுக்கு முன் பரபரப்பு!
அது மட்டுமல்லாமல், திருநெல்வேலி மாநகரத்தின் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து அவதி அடைந்து வருவதாகவும், மாநகராட்சியின் எச்சரிக்கையை மாட்டு உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி கூலித்தொழிலாளி. இவரது மனைவி…
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் உறவினரும் போக்சோ வில் கைது செய்யப்பட்டு…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்…
சமீபத்தில் திமுகவில் சேர்ந்து புதிய பதவிக்கு தேர்வான சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ், ஒரு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யை…
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பழைய நகரத்தை சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவும் வேலைக்காக பெங்களூரு சென்றனர். இவர்களுக்கு அனந்தபூர் மாவட்டம் குந்தகல்லை…
நடிகர் விக்ரம் கடின உழைப்புக்கு பெயர் போனவர். பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்த விக்ரம், தனக்கான வாய்ப்பை தேடி…
This website uses cookies.