பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே வீட்டின் மேற்கூரையில் திடீரென துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் வீட்டினுள் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெரம்பலூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாரணமங்கலம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ஒட்டி மலைப்பகுதியில், காவல்துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. நேற்று காலை, இங்குள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் பயிற்சி நடந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில், மருதஈச்சாங்காடு பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியின் வீட்டுக் கூரையில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருக்கிறது. அவரது வீட்டுக் கூரை ஆஸ்பெடாஸ் சீட்டால் போடப்பட்டிருந்தது. அதைதுளைத்துக்கொண்டு துப்பாக்கி குண்டு பாய்ந்திருக்கிறது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.
ஏற்கெனவே இதுபோல் ஒருமுறை துப்பாக்கி குண்டு வீட்டில் பாய்ந்ததாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். முன்னதாக கடந்த மாத இறுதியில் புதுக்கோட்டையில் துப்பாக்கிச்சுடும் பயிற்சி மையத்தில் இருந்து இதேபோல வெளியேறிய குண்டு ஒன்று, சிறுவனொருவனின் தலையில் பலமாக தாக்கியிருந்தது.
தற்போது மீண்டுமொருமுறை பெரம்பலூரில் இதேபோல நிகழ்வு ஏற்பட்டுள்ளது. வீட்டுக் கூரைக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டிருந்தாலும், இரண்டாவது முறையாக இதுபோன்ற துப்பாக்கிச்சூடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.