மொத்தமாக வந்த யானைக் கூட்டம்… 60 யானைகள் வந்ததால் அச்சம் : 10 கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!!
கர்நாடக மாநிலம் பன்னார் கட்டா வனப்பகுதிலிருந்து அக்டோபர், நவம்பர் மாதங்களில் யானை கூட்டங்கள் தமிழகத்திற்குள் நுழைந்து சானமாவு வனப்பகுதியில் தஞ்சமடையும்.அதேபோல் இந்த ஆண்டும் ஜவளகிரி என்னும் வனப்பகுதி வழியாக நூற்றுக்கு மேற்பட்ட காட்டு யானைக் கூட்டங்கள் தமிழக எல்லைக்குள் புகுந்தது,
பல குழுக்களாக பிரிந்த யானை கூட்டங்கள் தற்போது 60 க்கும் மேற்ப்பட்ட யானை கூட்டங்கள் தேன்கனிக்கோட்டை வழியாக சூளகிரி அடுத்த சானமாவு வனப்பகுதிக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு வந்தடைந்தது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு சானமாவு வனப்பகுதியில் இருந்து கெலமங்கலம், ஊடேதுர்கம் வழியாக வனப்பகுதிக்கு விரட்டியடிக்கபட்டது.
தற்போது விவசாய நிலத்தில் பயிரிடபட்ட ராகி, நெல் அறுவடை காலம் என்பதால் யானைக் கூட்டங்களை விரட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்
இந்த நிலையில் இன்று காலை மீண்டும் சானமாவு வனப்பகுதிக்கு 60 காட்டு யானைகள் வந்தடைந்தது, இதனை தொடர்ந்து சானமாவு வனப்பகுதியில் உள்ள 10 க்கும் மேற்பட்ட வனப்பகுதி ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து கண்காணித்த வந்த வனத்துறையினர் யானைக் கூட்டங்களை நேற்று மாலை முதல் 20க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் விரட்டும் பணியை மேற்கொண்டனர்,
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.