கன்னியாகுமரி மாவட்டம் தெள்ளாந்தியில் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை கூட்டங்கள் 900 வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவிற்கு உட்பட்ட சிதப்பால் அடுத்த தெள்ளாந்தி மலையடிவாரத்தில் மணிகண்டன் என்பவர் அருகே 6 ஏக்கர் விவசாய நிலத்தை பாட்டத்திற்கு எடுத்து வாழை மரங்களை வளர்த்து வருகிறார். தற்போது மரங்கள் அனைத்தும் குலை தள்ளியுள்ளது.
இந்த நிலையில், நேற்று இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூட்டமாக மலையடிவாரத்திற்கு வந்து வாழை தோப்புக்குள் புகுந்தது. அங்கு ஒரு ஏக்கர் பரப்பளவில் குலை தள்ளிய நிலையில் இருந்த வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளது. இதில் ஆறு காட்டு யானைகள் வந்துள்ளதாக தெரிகிறது.
மேலும் இதுபோன்று அப்பகுதியில் விளைநிலங்களை தொடர்ச்சியாக யானைகள் சேதப்படுத்தி வருவது அரங்கேறி வருகிறது.கடந்த ஆண்டு இது போன்று 600 வாழைமரங்களை யானை கூட்டங்கள் சேதப்படுத்தியுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
யானைகள் சேதப்படுத்திய வாழை மரங்களுக்கு நிவாரணம் தர வேண்டும், மேலும், யானைகள் இப்பகுதிக்கு வராதவாறு தடுப்புகள் அமைத்து தர வேண்டும், மேலும் சேதப்படுத்திய வாழைகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை என்றால், தனது தற்கொலைக்கு அரசுதான் காரணம் என கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொள்ள போவதாக விவசாயி மணிகண்டன் செய்தியாளர்களிடம் வேதனையோடு தெரிவித்துள்ளார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.