ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே தோப்புக்கனா குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சேட்டு. எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பானுமதி என்பவருடன் திருமணமாகி மிதுன்ராஜ் (வயது 9), கார்த்திகேயன் (வயது 4) என்ற இரு மகன்கள் உள்ளனர்.
பானுமதிக்கு வயிற்றில் நீர்க்கட்டி பிரச்சனை உள்ளதால் சிகிச்சை பெற்று வருகிறார். இருவருக்குமிடையே அவ்வப்போது தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், சேட்டுவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் பானுமதி இது குறித்து தனது கணவரிடம் கேட்டு சண்டையிட்டுள்ளார்.
அப்போது வாக்குவாதம் முற்றியதில் திடீரென கோபத்தில் சேட்டு தனது மனைவி பானுமதியை கன்னத்தில் அறைந்து கழுத்தை நெறித்துள்ளார். இதில் நிலைகுலைந்து கட்டிலில் விழுந்த பானுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பதட்டமடைந்த சேட்டு உடனடியாக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். தனக்கு எதுவும் தெரியாதது போல் வழக்கமாக பிள்ளைகளை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
மூத்த மகன் மிதுன்ராஜ் உள்ளே சென்று பார்த்தபோது, தனது தாய் கட்டிலில் கிடப்பதைக் கண்டு கூச்சலிட்டுள்ளார். பின்னர் சேட்டு உள்ளே சென்று பானுமதியை சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்ததோடு, கண்ணீர் மல்க கதறி அழுதுள்ளார்.
பானுமதி இறந்து விட்டதாக தெரிவித்த மருத்துவர்கள், அவரது உடலில் சந்தேகத்திற்கிடமான காயங்கள் இருந்ததை கண்டறிந்து ஆற்காடு நகர போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த ஆற்காடு நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். உயிரிழந்த பானுமதியின் கணவர் சேட்டுவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், தனது நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி கேள்வி எழுப்பியதால் கோபத்தில் கன்னத்தில் அறைந்து கழுத்தை நெரித்து கொன்றதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சேட்டு மீது வழக்கு பதிவு செய்த ஆற்காடு நகர போலீசார் ஆற்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையிலடைத்தனர்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.