Categories: தமிழகம்

கரூரின் மருமகன் ஆனார் கொரிய நாட்டு இளைஞர்.. தேசம் விட்டு தேசம் தாண்டி காதல் ; திருமணத்தில் இணைந்த பந்தம்!

கரூரின் மருமகன் ஆனார் கொரிய நாட்டு இளைஞர்.. தேசம் விட்டு தேசம் தாண்டி காதல் ; திருமணத்தில் இணைந்த பந்தம்!

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள நடையனூர் பகுதியைச் சார்ந்தவர் விஜயலட்சுமி(28) பொறியியல் பட்டம் பெற்ற இவர் பெங்களூரில் தனியார் ஐடி கம்பெனியில் பணிபுரிந்துள்ளார். இவருக்கு ஆங்கில மற்றும் கொரியன் மொழி தெரிந்துள்ளதால் ஆன்லைனில் தனது தொழில் சம்பந்தமாக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

அப்போது தென் கொரிய நாடு டோங்யோங் பகுதியை சார்ந்த மின்ஜுன் கிம் (28)உடன் வலைதளம் மூலம் பேச ஆரம்பித்துள்ளார். இவர் கிஸ்ட் பல்கலைக்கழகத்தில் வேதியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். இவருக்குரிய நாட்டில் உள்ள தனியார் ஐடி துறையில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த ஓராண்டாக ஆன்லைன் மூலம் பேசி வந்த அவர்கள் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த மார்ச் மாதம் நேரில் காண்பதற்காக தென் கொரியா சென்ற பெண்மணி மின்ஜுன் கிம் குடும்பத்தை நேரில் சந்தித்து பேசியதில் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டனர்.

அதேபோன்று பெண் வீட்டார் சார்பிலும் ஒப்புக்கொண்டனர் இந்த நிலையில் இரு விட்டார்கள் சம்மதத்துடன் திருமணம் தமிழ்நாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர்.

பெண் வீட்டார் திருமணம் பத்திரிக்கை அடித்து 19.05.2024 தேதி கல்யாணம் நிச்சயிக்கப்பட்டு அவர்களது உறவினர்களுக்கு வழங்கினர்.

தென் கொரியா நாட்டைச் சார்ந்த மின்ஜுன் கிம் குடும்பத்தினர் தாய் தந்தை அவரது நண்பர் உட்பட நான்கு நபர்கள் கடந்த வாரம் தமிழ்நாடு வந்தனர்.

மேலும் படிக்க: பால்கனியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் திடீர் தற்கொலை : கோவையில் சடலம் மீட்பு..!!!

வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள கோம்புபாளையம் பெருமாள் கோவிலில் இரு வீட்டார் முன்னிலையில் தமிழ் முறைப்படி உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். கிராம பகுதியில் முதல் முறையாக இது போன்ற திருமணம் நடைபெற்றதால் கொரியா நாட்டைச் சார்ந்த மணமகனை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

குறிப்பாக நேற்று இரவு நிச்சயதார்த்தம் நடைபெற்ற போது புதுமண தம்பதிகள் குழந்தைகளுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடி தங்களது சந்தோஷங்களை வெளிப்படுத்தினர்.

திருமணம் செய்து கொண்ட இருவரும் மணமகன் குடும்பத்தாருடன் தென் கொரியா நாட்டிற்கு செல்ல உள்ளனர் மேலும் அங்கு விஜயலட்சுமி தற்போது சுற்றுலா விசா மூலம் சென்ற பிறகு நிரந்தர விசா பெறுவதற்கு தேர்வு எழுத உள்ளதாக கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

உதவி ஏன் கேக்குறீங்க..அத முதல்ல நிறுத்துங்க..யாரை தாக்குகிறார் இயக்குனர் செல்வராகவன்.!

ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்த செல்வராகவன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் பல படங்களை இயக்கி வெற்றிகண்டுள்ளார்,சமீப…

9 minutes ago

EMI வசூலிக்க சென்ற நபர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.. விசாரணையில் பகீர் பின்னணி!

அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

32 minutes ago

தாயே மகளுக்கு செய்த கொடூரத்தின் உச்சம்.. நீலகிரியில் அதிர்ச்சி!

நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…

1 hour ago

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?

வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…

2 hours ago

இருதரப்பும் பேச என்ன இருக்கு? – உச்ச நீதிமன்ற உத்தரவு.. சீமான் ரியாக்‌ஷன்!

நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…

2 hours ago

கதற..கதற..மின்னல் வேகத்தில் ‘டிராகன்’ வசூல்..!

100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…

3 hours ago

This website uses cookies.