பெரியகுளம் அருகே சோலார் வேலியில் சிக்கி இருந்த சிறுத்தையை காப்பாற்ற சென்ற உதவி வன பாதுகாவலரை சிறுத்தை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் தேனி வனக்கோட்டம், மற்றும் வனச்சரகம், வரட்டாறு போடி வடக்கு மலை காப்பு காடு அடிவாரம் பெரியகுளம் வட்டம், தென்கரை கைலாசநாதர் கோவில் பகுதி தனியார் தோட்டத்தின் அருகில் வனப்பகுதியில் வனத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட சோலார் வேலியில் சிறுத்தை ஒன்று சிக்கி உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது.
சிறுத்தையை உதவி வனப்பாதுகாவலர் அவர்கள் மற்றும் சரக வனப் பணியாளர்களுடன் உயிருடன் மீட்க்கும் பணியில் ஈடுபடும் போது சிறுத்தை சோலார் கம்பி வேலியில் இருந்து தானாக விடுபட்டு உதவி வனப்பாதுகாவலர், மகேந்திரனை சிறுத்தை தாக்கிவிட்டு வனப் பகுதிக்குள் சென்றது.
சிறுத்தை தாக்கியதில் உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரன் காயத்துடன் தேனி தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சிறுத்தையை மீட்கும் பணியில் தேனி வனச்சரக அலுவலர், தேனி பிரிவு வனவர் மற்றும் வனக்காப்பாளர் வன ஊழியர்கள் உடனிருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
This website uses cookies.