குடியிருப்புகளுக்கு அருகே ஹாயாக நடந்து சென்ற சிறுத்தை.. உயிர் பயத்தில் மக்கள்..!

Author: Vignesh
28 ஆகஸ்ட் 2024, 4:26 மணி
Quick Share

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக வனப் பகுத தியான பரம்பிக்குளம் குடியிருப்புகளுக்கு நடுவே இரவில் உலா வரும் சிறுத்தைகள் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பரம்பிக்குளம் பகுதியில், இரவு நேரத்தில் குடியிருப்புகளுக்கு நடுவே சிறுத்தைகள் உலா வருகிறது.

சிறுத்தைகள் பரம்பிக்குளம் விருந்தினர் மாளிகை அருகே உலா வருவது குறித்து வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்கு அருகே சிறுத்தைகள் உலா வருவதால் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சிறுத்தையை விரட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 163

    0

    0