Categories: தமிழகம்

கவுன்சிலர் இல்லாத ஒரு லெட்டர் பேடு கட்சி.. பாஜகவில் இணைவதில் ஆச்சரியமில்லை : காங்., எம்பி கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!

கவுன்சிலர் இல்லாத ஒரு லெட்டர் பேடு கட்சி.. பாஜகவில் இணைவதில் ஆச்சரியமில்லை : காங்., எம்பி கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், உச்சநீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளதால் பொன்முடி எம்எல்ஏ ஆவதற்கும், அமைச்சர் ஆவதற்கும் சட்டப்படி தகுதி உண்டு என்றார்.

லும் போதைப் பொருளை கட்டுப்படுத்த அதன் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதுடன், போதையால் அடிமையானவர்களுக்கு சீர்திருத்த மையத்தையும் அமைக்க வேண்டும் என்ற அவர், பாஜக ஆளும் குஜராத்தில் தான் அதிகமான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப் பொருள் வர்த்தகத்தை திமுகவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டதால் தமிழ்நாட்டிற்கான பிரச்சனையாகவோ, ஒரு அரசியல் கட்சி சார்ந்த பிரச்சனையாகவோ பார்க்க கூடாது.

இந்தியாவிற்கான பிரச்சனையாக பார்க்க வேண்டும் எனக்கூறியவர், ஒரு தனி நபர் செய்யும் வர்த்தகத்திற்கு, அவர் சார்ந்த கட்சி பொறுப்பேற்க முடியாது என உறுதிப்பட தெரிவித்தார். குடியுரிமை வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது.

இந்தியாவில் இஸ்லாமிய மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் சிஏஏ சட்டத்தை பாஜகவினர் கொண்டு வந்துள்ளனர்.

இலங்கை அகதிகளை குடிமக்களாக சேர்த்துக் கொள்ளாததற்கு பாஜக விளக்கம் தர வேண்டும் என்றவர், இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் CAA சட்டத்தை கண்டிப்பாக திரும்பப் பெறுவோம் என்றும், அகதிகளுக்கு தஞ்சம் கொடுப்பது நல்ல எண்ணம்.

அதனை மத ரீதியாக பிறித்து பார்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

சமத்துவ மக்கள் கட்சி MP, MLA, கவுன்சிலர் இல்லாத அது ஒரு லெட்டர் பேடு கட்சி என்றும், பாஜகவுடன் இணைந்தது ஆச்சரியம் இல்லை என்றார்.

தமிழகத்திற்கு வந்த மோடி அறிவித்த திட்டங்கள் இதுவரை ஏதும் துவங்க கூட இல்லை. பாஜக அரசின் குழப்பத்திற்கு காரணம் தவறான ஜிஎஸ்டி கொள்கை. கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியாவில் தனிநபர் வருமானம் குறைகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயருகிறது.

சிறு தொழில் நடத்துபவர்களின் நிலை மோசமாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி அழைத்தால் தமிழக முழுவதும் தேர்தல் பரப்புரையும் மேற்கொள்வேன். எனது தாய் மாமன் நடிகர் கமலஹாசன் எனக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டால் அது எனது வெற்றிக்கு வழி சேர்க்கும் என கார்த்திக் சிதம்பரம் mp தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

6 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

6 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

7 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

7 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

7 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

7 hours ago

This website uses cookies.