20 ரூபாய்க்காக பறிபோன உயிர்.. டிபன் கடையில் நடந்த MURDER : உருட்டுக் கட்டையால் உயிரை எடுத்த கொடூரம்!
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கொன்னைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் இயேசுராஜ் வயது 50, இவரது மூத்த மகளும், மருமகனும் காவல்துறையில் காவலராக பணியாற்றி வருகின்றனர்.
இதே பகுதியில் ஜோசப் என்பவர் டிபன் கடை நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இயேசுராஜ் என்பவர் ஜோசப் டிபன் கடையில் டிபன் சாப்பிட்டு விட்டு 20 ரூபாய் குறைவாக இருந்ததால் பாக்கி வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்பு இயேசுராஜ் டிபன் கடைக்கு வந்தபோது, ஜோசப் 20 பாக்கி தரவில்லை என கேட்டுள்ளார் அதற்கு இயேசுராஜ் நான் சாப்பிடவில்லை என கூறியதால் இருவருக்கும் இடையே வாய் தராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ஜோசப் கடையில் இருந்த விறகு கட்டையால் இயேசுராஜ் மண்டையில் அடித்துள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த இயேசுராஜ் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் அங்கு இயேசுராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து டிபன் கடை நடத்திவரும் ஜோசப் என்பவரை தேடி வருகின்றனர். 20 ரூபாய் பாக்கிக்காக கொலை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.