20 ரூபாய்க்காக பறிபோன உயிர்.. டிபன் கடையில் நடந்த MURDER : உருட்டுக் கட்டையால் உயிரை எடுத்த கொடூரம்!
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கொன்னைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் இயேசுராஜ் வயது 50, இவரது மூத்த மகளும், மருமகனும் காவல்துறையில் காவலராக பணியாற்றி வருகின்றனர்.
இதே பகுதியில் ஜோசப் என்பவர் டிபன் கடை நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இயேசுராஜ் என்பவர் ஜோசப் டிபன் கடையில் டிபன் சாப்பிட்டு விட்டு 20 ரூபாய் குறைவாக இருந்ததால் பாக்கி வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்பு இயேசுராஜ் டிபன் கடைக்கு வந்தபோது, ஜோசப் 20 பாக்கி தரவில்லை என கேட்டுள்ளார் அதற்கு இயேசுராஜ் நான் சாப்பிடவில்லை என கூறியதால் இருவருக்கும் இடையே வாய் தராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ஜோசப் கடையில் இருந்த விறகு கட்டையால் இயேசுராஜ் மண்டையில் அடித்துள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த இயேசுராஜ் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் அங்கு இயேசுராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து டிபன் கடை நடத்திவரும் ஜோசப் என்பவரை தேடி வருகின்றனர். 20 ரூபாய் பாக்கிக்காக கொலை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.