பொள்ளாச்சி: நவமலையில் உள்ள மின்சார ஊழியர்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் நவமலையில் மின்சார ஊழியர்கள் குடும்பத்தார் மற்றும் மலைவாழ் மக்கள் என 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் காட்டுயானைகள் வருகை அதிகரித்தே காணப்படுகிறது.
இதை தடுக்கும் விதமாக வனத்துறையினர்மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வாகன ரோந்து பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து நேற்று மாலை குடியிருப்பு பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானை உலா வந்தது. குடியிருப்புவாசிகள் வனத்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் வனத்துறையினர் ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சிகள் மேற்கொண்டனர்.
மேலும் யானை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்துகின்றனர். கடந்த சில தினங்களாக சின்னார் பதிமலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும், கவி அருவி,வால்பாறை சாலை பகுதிகளில் நடமாட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.