தமிழகம்

மாடலிங் பெண்ணுக்கு ஆபாச அழைப்பு.. வசமாக சிக்கிய மேனேஜர்!

புதுச்சேரியைச் சேர்ந்த இளம்பெண்ணின் போட்டோவை மார்பிங் செய்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனியார் கல்லூரியில் பட்டபடிப்பு படித்து வருகிறார். அது மட்டுமல்லாமல், பியூட்டிசியன் மாடலிங்கும் செய்து வருகிறார். இதனால், அவர், தனது இனஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

இதனால், அவருக்கு ஆயிரக்கணக்கான Followers-களும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இப்பெண்ணின் புகைப்படத்தை எடுத்து ஆபாசமாகச் சித்தரித்து, அதை அவருக்கே அனுப்பி உள்ளார்.

மேலும், ஆபாச வார்த்தைகளால் வர்ணித்து, தன்னுடன் செல்போனில் பேச வர வேண்டும் அல்லது இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாசமாக வீடியோ காலில் வர வேண்டும் எனவும், இல்லையென்றால் மார்பிங் செய்த புகைப்படங்களை எல்லாம் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

எனவே, இது தொடர்பாக இணைய வழி காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்துள்ளார். இதன் பேரில், காவல் ஆய்வாளர் தியாகராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், அந்த நபர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: போலீஸ் விசாரணையில் அதிரடி திருப்பம்.. பயந்து போய் காரை திருடி சென்ற இளைஞர்கள் எடுத்த முடிவு..!!

மேலும், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணி செய்யும் ரூபசந்துரு (25) என்ற நபரின் செல்போனை ஆய்வு செய்தபோது, 30க்கும் மேற்பட்ட பெண்களை, அவர்களுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பில் இருந்து புகைப்படங்களைத் திருடி, மார்பிங் செய்து மிரட்டியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

7 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

7 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

8 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

8 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

8 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

8 hours ago

This website uses cookies.