தமிழகம்

பிரசவத்திற்காக வந்த கணவர்.. சடலமாக மீட்கப்பட்ட சிறுமி.. சிவகங்கையில் திடுக்கிடும் சம்பவம்!

சிவகங்கையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று கிணற்றில் வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கல்குளம் பகுதியைச் சேர்ந்தவரான பால்சாமி. 72 வயதான இவர், தற்போது சிவகங்கை இந்திரா நகர் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (அக்.24) காலை 8 மணி அளவில், கல்குளம் பகுதியில் உள்ள தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அப்போது, அங்கு இருந்த பாசனக் கிணற்றில் அடையாளம் தெரியாத இளம் பெண்ணின் உடல் மிதப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர், இது குறித்து உடனடியாக தாலுகா காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த சிவகங்கை தாலுகா போலீசார், தீயணைப்பு வீரா்களின் உதவியுடன் பெண்ணின் உடலை மீட்டுள்ளனர். அப்போதுதான், அவர் 16 வயது மதிக்கத்தக்க சிறுமி என போலீசார் கூறி உள்ளனர். பின்னர், சிறுமியின் உடலை உடற்கூராய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், மீட்கப்பட்ட சிறுமியின் வலது கை உடைந்த நிலையிலும், தலையில் காயங்கள் உடனும், ஆடைகள் கிழிந்தும் காணப்பட்டு உள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன்படி, முதலில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமிக்கு வயது 13 என உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரின் தாயார் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு, மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் மனைவியும் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு திருமணமாகி இரட்டைக் குழந்தைகள் பிறந்த நிலையில், ஒரு குழந்தை இறந்துள்ளது. எனவே, மற்றொரு குழந்தையின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்து உள்ளார்.

அப்போது, இவருக்கும், சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், சிறுமியை அழைத்துக் கொண்டு கல்குளம் அருகே உள்ள தனது சொந்த கிராமத்தில் உள்ள வீட்டிற்குச் சென்று உள்ளார். அங்கு அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். பின்னர், இது குறித்து உனது தாயிடம் தெரிவிக்கக் கூடாது எனக் கூறி இருக்கிறார். அதற்கு சிறுமி மறுப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர், சிறுமியை கொடூரமாகக் கொலை செய்து அருகில் இருந்த விவசாயக் கிணற்றில் வீசி விட்டு தப்பிச் சென்று உள்ளார். மேலும், சிறுமி மீட்கப்பட்ட இடத்தின் அருகில் இருந்த பெட்ரோல் பங்க்கில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் உடன் சிறுமி இருந்ததை போலீசார் முதலில் கண்டுபிடித்து உள்ளனர். இதனை வைத்து மேற்கொண்ட விசாரணையில் இச்சம்பவம் வெளி வந்து இருக்கிறது.

இதையும் படிங்க : தம்பியால் அண்ணனை விளாசும் நெட்டிசன்கள்.. தவெக மாநாட்டில் அஜித்!

இந்த நிலையில், அந்த இளைஞரைக் கைது செய்த சிவகங்கை தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்டு உள்ள நபர், ஏற்கனவே போக்சோ வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர் என்பதும், அதில் அவர் 8 ஆண்டுகள் வரை சிறையில் இருந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்து உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!

பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…

8 hours ago

யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…

9 hours ago

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

11 hours ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

12 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

12 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

13 hours ago

This website uses cookies.