மதுரையில் மது போதையில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, கார் ஓட்டுநர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மாநகர் கரிமேடு பொன்னகரம் 1ஆவது தெரு பகுதியை சேர்ந்த ராஜபாண்டி (24) என்ற இளைஞர் தனியார் கார் நிறுவனம் ஒன்றில் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
ராஜபாண்டியின் மனைவி கர்ப்பமான நிலையில், அவரது தாயார் வீட்டில் தங்கி இருந்ததால், நேற்று மனைவியின் வீட்டிற்கு சென்றுவிட்டு பொன்னகரம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு ராஜபாண்டி திரும்பியுள்ளார்.
இந்நிலையில் மதுரா கோட்ஸ் அருகே தனது நண்பர் வெங்கடேஷ் என்பவருடன் ராஜபாண்டி நின்றுகொண்டிருந்த போது, அதே பகுதியில் நின்றுகொண்டிருந்த மதுரை கரிமேடு பகுதியை சேர்ந்த மனோஜ்சிவா மனோஜ் (22), மணிகண்டன், லோகேஷ்(20) தத்தனரியை சேர்ந்த கிருஷ்ணகுமார், பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்த தங்கபாண்டி , சிம்மக்கலை சேர்ந்த கண்ணன் ஆகிய 6 பேர் கொண்ட கும்பல் ராஜபாண்டியிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.
அப்போது, இரு தரப்பினருக்கு வாக்குவாதம் முற்றிய நிலையில் ஓட்டுனர் ராஜபாண்டியை தாக்கி கீழே தள்ளிவிட்டு, அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். அங்கு அண்ணனை பார்க்க சென்ற ராஜபாண்டியின் தம்பி ஹரிஸ்பாண்டி கீழே கிடந்த ராஜபாண்டியை பார்த்தபோது சம்பவ இடத்திலயே தலை நசுங்கிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார்.
இதனையடுத்து, ஹரிஸ்பாண்டி கரிமேடு காவல்நிலையத்திற்கு அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர்.
கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கரிமேடு பகுதியை சேர்ந்த மனோஜ்சிவா மனோஜ் (22), மணிகண்டன், லோகேஷ்(20) தத்தனரியை சேர்ந்த கிருஷ்ணகுமார், பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்த தங்கபாண்டி , சிம்மக்கலை சேர்ந்த கண்ணன் ஆகிய 6 பேர் கொண்ட கும்பல் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களை கரிமேடு காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
This website uses cookies.