கால்நடைகளுக்கு மருத்துவம் என்று கூறி கிராமப்புற வாசிகளிடம் பணத்தை தட்டிப் பறிக்கும் போலி வைத்தியரை கையும் களவுமாக பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
கால்நடை மற்றும் விலங்குகளுக்காக ஏகப்பட்ட திட்டங்கள் மற்றும் கால்நடை மருத்துவத்திற்காக கோடிக்கணக்கில் திட்டங்கள் இருந்து வருகிறது. அப்படி இருந்தும் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா போடிகாமன்வாடி கிராமத்து பகுதியில் கால்நடை மற்றும் விலங்குகளுக்கு காலங்காலமாக தொக்கம் எடுப்பதாக கூறி, போடிகாமன்வாடி பகுதியை சேர்ந்த முத்தையா மகன் குமார் என்பவர் கால்நடை விவசாயிகளை ஏமாற்றி பணம் பறித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தன் இடுப்பில் பாலிதீன் பைகளை வைத்துக்கொண்டு, கால்நடைகளின் வயிற்றில் இருந்து எடுத்ததாக கூறி, ஒரு மாட்டிற்கு 300 விகிதம், கிராமவாசிகளிடம் வாங்கி லட்சக்கணக்கில் பணம் பறிப்பதாக போடி காமன்வாடி பகுதி கிராம மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
ஆகவே சம்பந்தப்பட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் தலையிட்டு இந்த தொக்கம் இருப்பதாக கூறி ஏமாற்றிய போலி வைத்தியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற திருட்டுத்தனமான நடைமுறை மாறும் என்பது அனைவரின் கோரிக்கையாகும்.
தற்போது மக்களிடம் வசமாக சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.