வேலூர் ; 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்து கொண்டிருந்த தாய் மாரடைப்பில் உயிரிழந்த அதிர்ச்சி கேட்டு அவரது மகனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு லாலாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சாமன். இவரது மனைவி பெரியதாயி. இவர்களது மகன் சிகாமணி கூலி தொழிலாளி. மேலும், இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகி குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சாமன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதனால், மகன் சிகாமணி உடன் வசித்த பெரியதாயி 100 நாள் வேலை செய்து வந்தார். இந்நிலையில், வழக்கம் போல் சாத்கர் ஊராட்சி கொண்டமல்லி கானாறு நீரோடையில் 100 நாள் வேலையில் பெரியதாயி ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
உடனே அங்கு இருந்தவர்கள் அவரது குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெரிய தாயின் மகன் சிகாமணிக்கும் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதில், அவரும் மயங்கி விழுந்து இறந்தார். இதனால், சிகாமணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.