வேலூர் ; 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்து கொண்டிருந்த தாய் மாரடைப்பில் உயிரிழந்த அதிர்ச்சி கேட்டு அவரது மகனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு லாலாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சாமன். இவரது மனைவி பெரியதாயி. இவர்களது மகன் சிகாமணி கூலி தொழிலாளி. மேலும், இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகி குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சாமன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதனால், மகன் சிகாமணி உடன் வசித்த பெரியதாயி 100 நாள் வேலை செய்து வந்தார். இந்நிலையில், வழக்கம் போல் சாத்கர் ஊராட்சி கொண்டமல்லி கானாறு நீரோடையில் 100 நாள் வேலையில் பெரியதாயி ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
உடனே அங்கு இருந்தவர்கள் அவரது குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெரிய தாயின் மகன் சிகாமணிக்கும் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதில், அவரும் மயங்கி விழுந்து இறந்தார். இதனால், சிகாமணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி! நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக…
This website uses cookies.