தமிழகம்

OMR சாலையில் மீண்டும் கல்லூரி மாணவர்களால் பறிபோன உயிர்.. எப்படி நடந்தது?

சென்னை அடுத்த ஓஎம்ஆர் சாலையில், கல்லூரி மாணவிகள் ஓட்டி வந்த கார் விபத்துக்குள்ளானத்தில் பைக்கில் சென்ற ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரை அடுத்த ஆலத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (45). இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில், இவர் இன்று திருப்போரூரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது குழந்தைகளை அழைத்து வருவதற்காக, ஆலத்தூர் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஓஎம்ஆர் சாலையில் திருப்போரூர் நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது, அவரைப் பின்தொடர்ந்து அதிவேகமாக வந்த கல்லூரி மாணவி ஓட்டி வந்த கார், தண்டலம் அருகே உள்ள சிறிய வளைவில் திரும்பும் போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியனில் மோதி, முன்னே சென்ற இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக மோதியுள்ளது. இதில், அங்கிருந்த மின் கம்பத்தை உடைத்துக் கொண்டு கார் விவசாய நிலத்தில் விழுந்து கவிழ்ந்துள்ளது.

அதேநேரம், இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற சுரேஷ்குமார் மீது மோதியதில், அவர் உடல் நசுங்கி 100 அடி தூரத்திற்கு அப்பால் தூக்கி வீசப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரை ஓட்டி வந்த கல்லூரி மாணவி, அவருடன் இருந்த ஹேமலதா, ஸ்வேதா, சவிதா, ஷாகித் மற்றும் தனுஷ் ஆகிய ஆறு பேர் பலத்த காயமடைந்தனர்.

இதனையடுத்து, இவர்கள் ஆறு பேரும் படூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் உணவுத் தொழில் நுட்பப் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். இது தொடர்பான விசாரணையில், கல்லூரி முடிந்து மாமல்லபுரம் சென்று ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு திரும்பியபோது, இந்த விபத்து நேரிட்டது தெரிய வந்தது.

இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த சுரேஷ்குமாரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், ஓஎம்ஆர் சாலையின் நடுவே சடலத்தை வைத்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், அங்கு வந்த திருப்போரூர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சாலை மறியலைக் கலைத்தனர்.

இதையும் படிங்க: பிரியாணிக்கு ஆசைப்பட்ட 75 வயது மூதாட்டி.. 30 வயது நபரால் பாலியல் தொல்லை.. மதுரையில் அதிர்ச்சி!

இதனையடுத்து, சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த ஆறு மாணவ, மாணவிகளும் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பண்டிதமேடு கிராமத்தில் சாலை ஓரமாக அமர்ந்து மாடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவர்கள் மீது கல்லூரி மாணவர்களின் கார் மோதி விபத்துக்குள்ளானதில், ஐந்து பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

Hariharasudhan R

Recent Posts

என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!

மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…

11 hours ago

அட செம.!கோவையில் சர்வேதச கிரிக்கெட் மைதானம்…ரசிகர்கள் குஷி.!

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…

12 hours ago

ஜெயிலுக்கு போக ரெடியா இருங்க…ஆபாச வீடியோ லீக்..நடிகை அட்டாக்.!

வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…

13 hours ago

3 நாளில் விவாகரத்து.. 19 வயது மகன் செய்த காரியம்.. ஆடு மேய்த்தபோது திடுக்கிடும் சம்பவம்!

விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…

13 hours ago

தீராத நோய்…வெளியே சொல்ல பயம்..பிரபல நடிகை வருத்தம்.!

காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…

14 hours ago

தண்ணீர் யாருக்கு காட்ட வேண்டும்? விஜய்க்கு அண்ணாமலை பதிலடி!

காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…

14 hours ago

This website uses cookies.