குமரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகளை போட்டோ எடுக்க முயன்ற நபர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி: திருச்சியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர், குமரி மாவட்டம் நான்குவழிச் சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று அதிகாலை நான்குவழிச் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்து உள்ளார்.
அப்போது, குமரிக்கு சுற்றுலா வந்த பயணிகள், தங்களை புகைப்படம் எடுத்துத் தருமாறு உதவி கேட்டு உள்ளார். இதற்கு உதவுவதாகக் கூறிய பாலசுப்பிரமணியம், அவர்களை போட்டோ எடுக்க முயன்று உள்ளார். அப்போது, அங்கு சொகுசு கார் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது.
இந்த சொகுசு கார் மோதியதில், பாலசுப்பிரமணியல் பலத்த காயங்கள் உடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, இது குறித்து அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பாலசுப்பிரமணியத்தின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ‘நாடா? சுடுகாடா?’.. ஒரு வாரமாகியும் முடங்கிக் கிடக்கும் விசாரணை.. அன்புமணி கடும் தாக்கு!
தொடர்ந்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு, குமரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகளை போட்டோ எடுக்க முயன்ற நபர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் – சி.பி.ஐ. இறுதி அறிக்கை! பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்…
அனிருத் இசைக்கச்சேரி ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கோலாகலமாக நேற்று தொடங்கியது.இந்த சீசனில் நேற்றைய முதல் போட்டியில் கொல்கத்தா நைட்…
தனுஷ் – அஜித் கூட்டணி நடிகர் அஜித் தற்போது 'குட் பேட் அக்லி' படத்தின் வெளியீட்டிற்காக தயாராகி வருகிறார்.இந்த படம்…
தெலுங்கு சினிமாவில் டேவிட் வார்னர் தெலுங்கு திரையுலகில் நிதின் மற்றும் ஸ்ரீலீலா இணைந்து நடித்துள்ள "ராபின் ஹுட்" திரைப்படம் மிகுந்த…
ஐபிஎல் ஒரிஜினல் பிளேயர் விராட் கோலி ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுடன் மார்ச் 22ஆம்…
கணவரை பாதுகாக்க போராடுகிறேன்.! நடிகர் மதுரை முத்து விஜய் டிவியின் பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.மேலும்…
This website uses cookies.