குமரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகளை போட்டோ எடுக்க முயன்ற நபர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி: திருச்சியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர், குமரி மாவட்டம் நான்குவழிச் சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று அதிகாலை நான்குவழிச் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்து உள்ளார்.
அப்போது, குமரிக்கு சுற்றுலா வந்த பயணிகள், தங்களை புகைப்படம் எடுத்துத் தருமாறு உதவி கேட்டு உள்ளார். இதற்கு உதவுவதாகக் கூறிய பாலசுப்பிரமணியம், அவர்களை போட்டோ எடுக்க முயன்று உள்ளார். அப்போது, அங்கு சொகுசு கார் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது.
இந்த சொகுசு கார் மோதியதில், பாலசுப்பிரமணியல் பலத்த காயங்கள் உடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, இது குறித்து அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பாலசுப்பிரமணியத்தின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ‘நாடா? சுடுகாடா?’.. ஒரு வாரமாகியும் முடங்கிக் கிடக்கும் விசாரணை.. அன்புமணி கடும் தாக்கு!
தொடர்ந்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு, குமரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகளை போட்டோ எடுக்க முயன்ற நபர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.