கோவை : ஓடும் ரயில் தவறி விழுந்த முதியவரை கண் இமைக்கும் நேரத்தில் உடனடியாக காப்பாற்றிய ரயில்வே போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சேலத்தை சேர்ந்த சிவகுமார் என்பவர் கேரளா கண்ணூர் சென்று கோயமுத்தூர் திரும்பியிருக்கின்றார். கோயமுத்தூரில் இறங்க வேண்டிய அவர் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுள்ளார். ரயில் கோவை ரயில் நிலையம் வந்து, பின்னர் புறப்படும் போது உடனடியாக அவர் விழித்துக்கொண்டு ஓடும் ரயிலிலிருந்து இறங்க முயன்றார்.
அப்போது, நிலை தடுமாறு கீழே விழுந்தார். இதனால், தண்டவாளத்துக்கு அடியில் தடுமாறி விழுந்தார். அப்போது, பணியில் இருந்த ரயில்வே இருப்பு பாதை காவல் நிலைய குற்றப்பிரிவு தலைமை காவலர் (203) ரமேஷ், காவலர் (1025) மாரிமுத்து, மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் அருண்ஜித், பெண் தலைமை காவலர் மினி, ஆகியோர் தண்டவாளத்தில் விழுந்த நபரான சேலத்தை சேர்ந்த சிவகுமாரை கண் இமைக்கும் நேரத்தில் காப்பாற்றினர். இதனால் சிவகுமார் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
பின்னர், அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கண் இமைக்கும் நேரத்தில் விபத்துக்குள்ளான நபரை லாவகமாக காப்பாற்றிய கோயமுத்தூர் ரயில்வே காவலர்களை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.