தெலுங்கானாவில் EMI செலுத்தாத இளைஞர், திடீரென கடனில் வாங்கிய பைக்கை ஏஜெண்டுகள் முன்பே எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஷிவம்பேட்டை: தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டம் ஷிவம்பேட்டையில் இளைஞர் ஒருவர் தங்கி உள்ளார். இவர் சமீபத்தில் இஎம்ஐ மூலம் பைக் வாங்கியுள்ளார். இதனையடுத்து, மாதந்தோறும் தவறாமல் தவணையைச் செலுத்தி வந்து உள்ளார். ஆனால், இந்த மாதம் சில காரணங்களால் பைக்கின் தவணையைச் செலுத்த முடியவில்லை எனத் தெரிகிறது.
இதனால் நிதி நிறுவன ஏஜென்ட்களிடம் இளைஞருக்கும் இருந்து போன் அழைப்புகள் வரத் தொடங்கி உள்ளன. அப்போது, அந்த இளைஞர் பணம் செலுத்த சிறிது காலம் தருமாறு கேட்டு உள்ளார். ஆனால், நிதி நிறுவனத்தின் முகவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளனர். இறுதியாக, பைக்கிற்கான தவணையைச் செலுத்த வேண்டும் என்று கூறி, அந்த இளைஞரின் வீட்டிற்கு வந்து கூறி உள்ளனர்.
இதையும் படிங்க: 3 பேரின் உயிரைக் கொன்ற கூகுள் மேப்.. உ.பியில் சோகம்!
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், நிதி நிறுவன முகவர்கள் பார்த்து கண் முன்னே பைக்கிற்கு தீ வைத்து எரித்து உள்ளார். இதில் பைக் முற்றிலும் எரிந்து இருக்கிறது. பின்னர், இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.