மெரினா வான் சாகச நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பிய நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெருங்களத்தூர், இராமனுஜர் தெருவை சேந்தவர் சீனிவாசன்(48), இவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ரேடியோகிராபராக பணிபுரிந்து வருகிறார். மனைவி ஒரு மகன், மகள் உள்ளனர்.
நேற்று விமானப்படை சார்பாக நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியை காண தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் மெரினா கடற்கரை சென்று விட்டு வீடு திரும்பிய போது வெயில் காரணமாக, எம்.எல்.ஏ.விடுதி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து மயங்கி கீழே விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சாகச நிகழ்ச்சியை காண சென்று வீடு திரும்பாத சீனிவாசனின் உயிரிழப்பு அவரது உறவினர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.