கோவையிலிருந்து மும்பைக்கு விமானத்தில் புறப்பட இருந்த நபரிடம் கோவை விமான நிலையத்தில் நடத்திய சோதனையில் அவரது பையில் இருந்த இரண்டு துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் கோவையிலிருந்து மும்பைக்கு நேற்று மாலை விஸ்தாரா நிறுவன விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணிகள் மற்றும் உடமைகளை முதற்கட்டமாக பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஒருவரது கைப்பையில் இரண்டு துப்பாக்கி தோட்டக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பையை கொண்டு வந்த ராஜஸ்தானை சேர்ந்த ஷியாம்சிங் என்ற நபரிடம் விசாரித்தபோது இதுகுறித்து தனக்கு ஒன்றும் தெரியாது என அந்த நபர் கூறவே சந்தேகமடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பீளமேடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் ராஜஸ்தானை சேர்ந்த சியாம் சிங் என்பதும் கடந்த மாதம் திருப்பூரில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு வந்து தங்கியிருந்த பின்னர் நேற்று பிற்பகல் தனது சொந்த ஊருக்கு செல்ல இருந்ததும் முதலில் மும்பை சென்று அங்கிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு செல்ல இருந்ததும் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து விஸ்தாரா விமான நிறுவன பாதுகாப்பு பரிசோதகர் அருண்குமார் அளித்த புகாரின் பேரில் பீளமேடு காவல்நிலைய போலீசார் ஆயுத கடத்தல் பிரிவில் வழக்குபதிவு செய்து அந்த நபரை கைது செய்தனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.