விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் பெற்ற குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 4 ஆயுள் தண்டனையும் 20 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மகாராஜபுரத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தான் பெற்ற 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வந்தது.
மேலும், இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறிய மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் பெற்றகுழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை சுந்தர்ராஜ்க்கு 4 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். அதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் அவருக்கு 20 ஆயிரம் அபராதம் விதித்தும் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தமிழக அரசு ரூபாய் 10 லட்சம் வழங்க பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.