Categories: தமிழகம்

சினிமாவை மிஞ்சிய கடத்தல் சம்பவம்… வேகமாக சாலையில் சீறிப்பாய்ந்த கார்.. சாலையில் வாகனங்களை குறுக்கே போட்டு தெலங்கானா கும்பலை மடக்கி பிடித்த போலீஸ்..!!

காஞ்சிபுரம் அருகே பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப வந்த வாலிபர் தெலுங்கானா நபர்களால் கடத்தல் சம்பவம் அரங்கேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் அய்யம்பேட்டை ஊராட்சியை சேந்தவர் ஜெய்கணேஷ். இன்று காலை தனது 3 பெண் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அய்யம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே பள்ளிக்கு செல்லும் வாகனத்தில் தனது மகள்களை அனுப்ப வந்த ஜெய் கணேஷை காரில் வந்த மர்ம கும்பல் கடத்தியது.

இந்த தகவல் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டதால் அனைத்து பகுதிகளிலும் காவல் துறையினர் அலர்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் சிக்னல் அருகே தெலுங்கானா ரெஜிஸ்ட்ரேஷன் கொண்ட கிரே கலர் கார் வேகமாக வந்தது. அதை அந்த பகுதியில் இருந்த போக்குவரத்து காவலர் தனசேகர் என்பவர் மடக்கி பிடிக்க முயலும்போது அவரை மீறி கார் செல்ல முற்பட்டது.

அதை கண்ட அந்த பகுதியில் இருந்த பொதுமக்களும், ஆட்டோ ஓட்டுநர்களும் சாலையின் குறுக்கே தங்கள் வாகனத்தை நிறுத்தி அந்த கார் மேற்கொண்டு செல்லாதவாறு தடுத்து நிறுத்தினர்.

அந்த காரில் தான் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மகேஷ், கிரிபாபு, சந்திரசேகர், சந்திரபாபு உள்ளிட்ட நான்கு பேர் ஜெய் கணேஷை கடத்தியது தெரிய வந்தது. அப்பொழுது அந்த வழியாக வந்த தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் துளசி அவர்கள், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் மற்றும் ஜெய்கணேஷ் ஆகியோர்களை பிடித்து சிவகாஞ்சி காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

அங்கு வைத்து துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர் தலைமையில் ஆய்வாளர் விநாயகம் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்களுடன் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு நண்பரும் சேர்ந்து ஜெய் கணேஷை கடத்தியது தெரிய வந்தது.

விசாரணையில் ஜெய் கணேஷ் தெலுங்கானாவில் வேலை செய்த போது, சந்திரபாபு என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்திரபாபு இடம் ஜெய் கணேஷ் 16 லட்சம் ரூபாய் பணம் கடனாக பெற்றிருந்தார். சந்திரபாபு தான் கொடுத்த பணத்தை கேட்ட பொழுதெல்லாம் பல இடங்களில் முதலீடு செய்துள்ளதாக ஜெய் கணேஷ் கூறியுள்ளார்.

ஒரு கட்டத்தில் இவர் ஏமாற்றுவது போல் நடந்து கொண்டதால், தெலுங்கானாவிலிருந்து காஞ்சிபுரம் வந்த நபர்கள் மூன்று நாட்களாக காஞ்சிபுரத்தில் தங்கி ஜெய்கணேசிடம் தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். அவர் பணத்தைக் கொடுக்க காலதாமதம் செய்து வந்ததால் இன்று காலையில் தங்களுடைய மகள்களை பள்ளிக்கு அனுப்ப ஐயம்பேட்டை பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த ஜெய்கணேசை மேற்கண்ட நபர்கள் காரில் கடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.

இது தொடர்பான கண்காணிப்பு கேமரா புட்டேஜை காட்சிகள் அருகே உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பதிவாகியுள்ளது. நமது செய்தியாளர்கள் கண்காணிப்பு கேமரா புட்டேஜ்யை ஆய்வாளர் ஜெயவேல் அவர்களிடம் கேட்ட போது, மேற்கண்ட காட்சிகளை வழங்கக் கூடாது என கூறியுள்ளார். இதனால் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் மேலாளர் மேற்கண்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை நமக்கு வழங்கவில்லை.

தற்போது தெலுங்கானாவை சேர்ந்த நபர்களும் கைது செய்யப்பட்டு வாலாஜாபாத் காவல் நிலையத்தில் வைத்து மேற்கொண்டு விசாரணை வருகின்றார்கள். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த நபர்கள் அய்யம்பேட்டை பகுதியில் உள்ள கடத்த முயன்ற விஷயம் அய்யம்பேட்டை பகுதியில் மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்தியது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

கைதி 2 ட்ராப்? அப்போ அவரும் அவுட்டா? முக்கிய பிரபலத்துடன் இணையும் கார்த்தி!

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…

9 hours ago

வெறுப்பேற்ற கள்ளக்காதல் நாடகம்.. கணவரின் உயிரைப் பறிந்த CRPF வீரர்!

அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…

10 hours ago

சுற்றி வளைக்கும் பாஜக.. திக்குமுக்காடும் திமுக.. பட்ஜெட் மீது கடும் தாக்கு!

டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…

11 hours ago

முதலில் ஒருவர் அறிக்கை விடுகிறார்.. அடுத்து ED சொல்கிறது.. செந்தில் பாலாஜி அட்டாக் பேச்சு!

ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…

12 hours ago

நடிகை சினேகாவுக்கு அரிய வகை நோய்.. தைரியத்தை பாராட்டும் பிரசன்னா!

நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…

12 hours ago

பில்டப் காட்டி சீன் போட்ட நயன்தாரா.. பதிலடி கொடுத்த 90களின் கனவுக்கன்னி!

நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…

13 hours ago

This website uses cookies.