கோவை ; பொள்ளாச்சி அருகே போடிபாளையம் பகுதியில் மனைவியை கொன்று கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி பஞ்சாயத்து உட்பட்ட போடிபாளையம் பகுதியில் சென்னியப்ப பிள்ளை தோட்டம் என்ற தோட்டத்து சாலையில் காளிமுத்து, ராஜேஸ்வரி இருவரும் கடந்த ஒரு வருடமாக பண்ணைய வேலை பார்த்துக் கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இறந்தவர்களின் மகள் கவிதாமணி என்பவர் கோவையில் கணவருடன் வசித்து வருகிறார். கடந்த 9 மாதங்களாக கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால், இறந்து போன ராஜேஸ்வரி கோவையில் உள்ள தனது மகள் வீட்டில் இருந்து கொண்டு சுகுணா பள்ளியில் ஆயாவாக வேலை பார்த்து இருந்து வந்துள்ளார்.
நேற்று மதியம் கணவர் காளிமுத்து தனது மகள் வீட்டுக்கு சென்று தனது மனைவியை சமாதானம் செய்து, தோட்டத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
இரவு 9 மணிக்கு மேல் மீண்டும் இருவருக்குள்ளே வாக்குவாதம் ஏற்பட்டதால், மனைவியை தலையணையை வைத்து அழுத்தி கொன்று விட்டு, காளிமுத்துவும் தூக்குபோட்டு தற்கொலை செய்து உள்ளார். இந்த சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
This website uses cookies.