Categories: தமிழகம்

படுகொலையில் முடிந்த டிவி விவாத நிகழ்ச்சி… பட்டப்பகலில் கூலித் தொழிலாளி வெட்டிக்கொலை ; தாய், மகன் எஸ்கேப்..!!!

தனியார் தொலைக்காட்சி நடத்திய ‘வாழ்ந்து காட்டுவோம்’ நிகழ்ச்சியில் ஏற்பட்ட சண்டையில் மகனே தந்தையை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, தாண்டவராயபுரம், மாதா கோவில் தெருவில் வசிப்பவர் லட்சுமணன் மகன் கருப்பண்ணன் (67). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கு, மனைவி மாரியம்மாள் (65), மகன் ராஜா (40), மகள் சந்திரா (35) உள்ளனர். மகன் ராஜாவுக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில், முதல் மனைவியை பிரிந்து இரண்டாது மனைவியுடன் இருந்து வருகிறார். மகள் சந்திராவுக்கு திருமணமாகி அவரது கணவர் வீட்டில் வசித்து வருகிறார்.

மேலும் படிக்க: குடியரசு தலைவருக்கே இந்த நிலைமையா..? இதுதான் பாஜக ஆட்சி ; கோபத்தில் கொந்தளித்த கனிமொழி..!!!

மேலும், ராஜா கட்டிட கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், ராஜாவின் தந்தை கருப்பண்ணன், அவரது பெயரில், தாண்டவராயபுரம் மற்றும் வெண்ணந்தூர் பகுதியில் உள்ள சொத்தை மகன் ராஜாவின் முதல் மனைவி மகன் சங்கர் என்பவரின் பெயரில் சொத்தை எழுதி வைக்க முடிவு செய்துள்ளார்.

இதனால், தந்தை கருப்பண்ணனுக்கும், மகன் ராஜாவுக்கும், கடந்த சில ஆண்டுகளாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், கருப்பண்ணன் தனது மனைவி மாரியம்மாளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில், ராஜா தனது பெயரில் சொத்தை எழுதி வைக்குமாறு ராஜாவும், அவரது தாய் மாரியம்மாளும் கருப்பண்ணனிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: ‘யாருமே நம்ப மாட்டீறாங்க’…. விவாகரத்து முடிவில் மனைவி ; வீடியோ வெளியிட்டு அரசுப் பேருந்து ஓட்டுநர் தற்கொலை…!!!

இரு வாரங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சியில் வாழ்ந்து காட்டுவோம் என்ற விவாத நிகழ்ச்சியில் கருப்பண்ணன், அவரது மனைவி மாரியம்மாள், மகன் ராஜா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது.

இந்நிலையில், இன்று வீட்டில் தனியாக இருந்த கருப்பண்ணனை, அவரது மனைவி மாரியம்மாள், மகன் ராஜா ஆகிய இருவரும் அரிவாளில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர். ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த கருப்பண்ணன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து வந்த ஆத்தூர் நகர போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்த பின்னர், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய மனைவி மாரியம்மாள், மகன் ராஜாவையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சொத்து தகராறில் தந்தையை பட்டப் பகலில் கட்டிய மனைவியும், மகனும் வெட்டி படுகொலை செய்த சம்பவம் ஆத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

நித்தியானந்தா இறந்து 2 நாட்கள் ஆச்சு.. பகீர் கிளப்பிய வீடியோ : APRIL FOOL செய்கிறதா கைலாசா?

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நித்தியானந்தா கர்நாடகாவில் தனக்கென தனி சீடர் கூட்டத்தை உருவாக்கி ஒரு ஆசிரமத்தை எழுப்பினார். ஆன்மீக சொற்பொழிவாற்றி…

17 minutes ago

மாட்டிக்கினாரு ஒருத்தரு… தானமளித்து வீடியோ போட்ட இர்ஃபானை பந்தாடும் இணையவாசிகள்…

யூட்யூப் பிரபலம் Food Vlogger இர்ஃபானை தெரியாத நபர்களே இருக்கமாட்டார்கள். அந்தளவுக்கு இணையவாசிகளின் மத்தியில் மிகப் பிரபலமான யூட்யூபராக வலம்…

26 minutes ago

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே… நீங்க எதிர்பார்த்த தேர்வு : வெளியானது முக்கிய அறிவிப்பு!

குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ பணிகளுக்கான தேர்வு பற்றி அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. குரூப் 1 தேர்வுக்கு…

45 minutes ago

இனி கனவுல கூட நினைச்சு பாக்க முடியாது.. புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை!

தங்கம் என்ற சொல்லை உதட்டளவு இனி உச்சரிக்கத்தான் முடியும் என்பது போல தினமும் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை…

2 hours ago

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

16 hours ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

17 hours ago