கோவை ; கோவையில் காதல் கணவனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது ஏன்..? என்பது குறித்து கைதான மனைவி பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவை சுந்தராபுரம் பிள்ளையார்புரம் சிட்கோ பகுதியைச் சேர்ந்தவர் ரங்கன் எலக்ட்ரீசியன். இவர் அந்த பகுதியைச் சேர்ந்த கோகுல ஈஸ்வரி என்பவரும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
ரங்கனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும், ரங்கன் குடித்து விட்டு தனது மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று ரங்கன் குடித்துவிட்டு கோகுல ஈஸ்வரியுடன் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த கோகுல ஈஸ்வரி, ரங்கனின் தலையில் கிரைண்டர் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்தார்.
இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.இந்நிலையில் காதல் கணவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது ஏன் ? என்பது குறித்து கோகுல ஈஸ்வரி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:- நானும், ரங்கனும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். நான் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். இந்நிலையில் ரங்கன் தினமும் குடித்து விட்டு வந்து என்னை எனது குழந்தையையும் அடித்து உதைத்து கொடுமைப் படுத்தினார். இதனால் எங்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
என்றாவது ஒருநாள் அவர் திருந்தி விடுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவரின் குடிப்பழக்கம் தான் அதிகரித்தது. வீட்டு செலவிற்கு பணம் எதுவும் கொடுக்க மாட்டார். மேலும் என்னிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தேன். எனது கணவருடன் வாழ பிடிக்காமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றேன்.
ஆனால் உறவினர்கள் என்னை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி விட்டனர். நான் கடந்த சில ஆண்டுகளாக எனது கணவரால் கடும் சித்திரவதைக்கு ஆளாகினேன். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் ஒரு சில நாட்கள் மட்டும் சித்திரவதை செய்யாமல் இருப்பார். பின்னர் மீண்டும் தனது சித்திரவதை ஆரம்பித்துவிடுவார். சம்பவத்தன்று வழக்கம் போல் குடித்து விட்டு என்னிடம் தகராறு செய்தார்.
மேலும் குடிபோதையில் என்னையும், குழந்தையும் தாக்கினார். பின்னர் நன்கு தூங்கிவிட்டார். இதை அடுத்து அவர் மீது கடும் கோபத்தில் இருந்த நான். இரவில் வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லை எடுத்து அவரது தலையில் தூக்கி போட்டேன். இதில் அவர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார், இவ்வாறு போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கோகுல ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.
பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.