வேலூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சிசிடிவி காட்சிகளை வைத்து கணவனை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம், மேல்பட்டி அடுத்த அழிஞ்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரியான ஜெய்ஷங்கர் (43) என்பவருக்கும், புனிதா (32) என்பவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு நிவேதா(9) என்ற பெண்ணும் நீதிஷ் (7) என்ற ஆண் மகன் உள்ளார்கள் புனிதா ஆம்பூரில் உள்ள தனியார் தோல் தொழில் சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார்,
குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி வாய் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையான கட்டிட மேஸ்திரி ஜெய்சங்கர், மது அருந்திவிட்டு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அடிக்கடி சண்டையிடுவது வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு மனைவி ஆம்பூரில் உள்ள தனியார் காலனி தொழிற்சாலையில் வேலையை முடித்துவிட்டு ஊருக்கு பேருந்தில் இறங்கி வந்து கொண்டிருந்தபோது, கணவன் அவர் வருவதைக் கண்டு அருகே சென்று மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த புனிதாவை மீட்டு அருகே இருந்தவர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதனிடையே சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஜெய்சங்கரை மேல்பட்டி போலீசார் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
This website uses cookies.