வத்தலகுண்டுவில் குடும்பத் தகராறில் பிரிந்து சென்ற மனைவியை தன்னுடன் வாழ வராததால் கழுத்தை அறுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட கணவனை வத்தலகுண்டு காவல்துறையினர் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி விஜயலட்சுமி இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகனும், ஏழு வயதில் ஒரு மகனும், 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். ராமு ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களாக கேரளாவில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்.
விஜயலட்சுமி நிலக்கோட்டையில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு தொடர்ந்து சண்டை வந்துள்ளது. இதனை அடுத்து, இருவரும் சேர்ந்து வாழாமல் விஜயலட்சுமி கணவரை பிரிந்து வத்தலகுண்டுவில் உள்ள தாய் வீட்டில் விஜயலட்சுமி வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், தனது தாயாரும், விஜயலட்சுமியும் வத்தலகுண்டுவில் உள்ள கடைக்கு சென்று விட்டு காந்தி நகர் பகுதியில் நடந்து வரும் போது, குடிபோதையில் இருந்த ராமு தனது மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ வரும்படி அழைத்துள்ளார்.
இதனை அடுத்து, குடிக்காமல் ஒழுக்கமாக வேலைக்கு சென்று வந்தால் மட்டுமே வாழ வருவதாகவும், இல்லை என்றால் வர முடியாது என கூறியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த ராமு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஜயலட்சுமியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த விஜயலட்சுமி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டனர்.
விரைந்து வந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை மீட்டு வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வத்தலகுண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும், கழுத்தை அறுத்து மனைவியை கொலை செய்ய முயன்ற ராமுவை வத்தலகுண்டு காளியம்மன் கோவில் அருகில் காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
This website uses cookies.