தென்காசியில் 45 வயது நபர் ஒருவர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி: தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கருத்த பிள்ளையூர் அந்தோணியார் தெருவைச் சேர்ந்தவர் அருள். இவரது மகன் சொக்கன் என்ற இருதயராஜ் (45). இவர் ஆதரியானூர் பகுதியில் உள்ள அச்சங்குளம் – கள்ளத்திகுளம் பகுதியில் மீன் பாசி குத்தகைக்கு எடுத்து உள்ளார்.
மேலும், இவர் இரவு நேரத்தில் குளத்துக் கரையில் காவல் இருப்பதை வழக்கமாகக் கொண்டு உள்ளார். அந்த வகையில், நேற்று இரவும் சொக்கன் காவலில் இருந்துள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள், சொக்கனை அரிவாளால் தாக்கியது மட்டுமல்லாமல், அவரது தலையைத் துண்டித்து கொலை செய்துள்ளனர்.
பின்னர், இது குறித்து தகவல் அறிந்த ஆழ்வார்குறிச்சி போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று, சொக்கனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.
தொடர்ந்து விசாரணை நடத்திய அவர்கள், பாதுகாப்பு பணிக்கு சில காவலர்களை நியமித்துவிட்டுச் சென்றுள்ளனர். மேலும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சொத்துப் பிரச்னை காரணமாக இந்தக் கொலை சம்பவம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: மேஸ்திரியுடன் தகாத உறவு.. கணவனை நூதனமாக கொன்ற மனைவி!
இதனைத் தொடர்ந்து, கொலை செய்த மர்ம நபர்களை செல்போன் எண்களைக் கொண்டு போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். முன்னதாக, அருகில் உள்ள நெல்லை மாவட்டத்தில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக வந்த மாயாண்டி மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் மாயாண்டி ஆகிய இருவரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.