தமிழகம்

வாடகைதாரரை கொலை செய்தபோது வெளியான கணவரின் வெறிச்செயல்.. கோவையில் 5 ஆண்டுகள் கழித்து கிடைத்த துப்பு!

கோவையில் வாடகைதாரரை கொலை செய்த நபர், ஏற்கனவே தனது மனைவியையும் கொலை செய்த சம்பவம் 5 வருடங்கள் கழித்து வெளி வந்துள்ளது.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், வாகராயம்பாளயத்தில் கடந்த நவம்பர் 15ஆம் தேதி அன்று வீட்டில் தனியாக இருந்த இளங்கோவன் என்பவரை பைக்கில் முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல், மிளகாய் பொடியைத் தூவி, கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்று உள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், கொலை செய்யப்பட்ட இளங்கோவனின் வீட்டு உரிமையாளர் அமிர்தராஜ் மற்றும் அவருடன் வாழ்ந்து வரும் கலைவாணி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், அமிர்தராஜ் வாகரயாம்பாளையம் பகுதியில் தனது மனைவி விஜயலட்சுமி உடன் வசித்து வந்து உள்ளார். அப்போது, அமிர்தராஜுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கலைவாணி என்பவருக்கும் திருமணத்தை மீறிய தொடர்பு இருந்து உள்ளது. இது ஒரு கட்டத்தில், மனைவி விஜயலட்சுமிக்கு தெரிய வந்துள்ளது. அப்போது, அமிர்தராஜை விஜயலட்சுமி கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த அமிர்தராஜ், தனது மனைவியைக் கொலை செய்யத் திட்டமிட்டு, தன் வீட்டில் குடியிருந்த இளங்கோவனை அணுகியுள்ளார்.

இதன்படி, கடந்த 2019ஆம் ஆண்டு இளங்கோவன் மூலம் ஓட்டுநர் ஒருவரை ஏற்பாடு செய்து, லாரியை விஜயலட்சுமி மீது ஏற்றி மனைவியை கொலை செய்துள்ளார் அமிர்தராஜ். ஆனால், போலீசில் லாரி மோதியதில் விஜயலட்சுமி இறந்து விட்டதாக புகார் அளித்தது மட்டுமல்லாமல், மனைவி பெயரில் இருந்த ஆயுள் காப்பீட்டுத் தொகை 15 லட்சம் ரூபாயையும் அமிர்தராஜ் பெற்றுள்ளார். பின்னர், கள்ளத் தொடர்பில் இருந்த கலைவாணியுடன் 5 ஆண்டுகளுக்கும் மேலாக அமிர்தராஜ் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், விஜயலட்சுமியின் கொலைக்கு உடந்தையாக இருந்த இளங்கோவன், வாடகை எதுவும் கொடுக்காமல் பல ஆண்டுகளாக அமிர்தராஜின் வீட்டில் குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் இளங்கோவனை வீட்டை காலி செய்யுமாறு அமிர்தராஜ் கூறியுள்ளார். அப்போது, உனது மனைவியை நீ லாரியை ஏற்றி கொலை செய்ததை போலீசிடம் தெரிவித்து விடுவேன் என இளங்கோவன் அமிர்தராஜ் மிரட்டியுள்ளார். எனவே, கலைவாணியுடன் சேர்ந்து கூலிப்படையை வைத்து இளங்கோவனை கொன்றுள்ளார் அமிர்தராஜ் என்பது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதையும் படிங்க: ‘காட்டு கவர்ச்சி’ காட்டிய கீர்த்தி சுரேஷ்.. பாலிவுட்டுக்கு போனா மட்டும் தாராளமா?

தற்போது இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக, அமிர்தராஜ், கலைவாணி மற்றும் சிறார் உள்ளிட்ட மேலும் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, தலைமறைவாக உள்ள கூலிப்படையைச் சேர்ந்த 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

துரோகம் செய்த ஐபிஎல்..அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான்..வார்னர் எடுத்த முடிவு .!

பாகிஸ்தான் பி.எஸ்.எல். லீக்கில் வார்னரின் புதிய பாதை உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 2025 ஐபிஎல் தொடருக்கு மத்தியில்,பாகிஸ்தான்…

9 hours ago

பெரும் சோகத்தில் ‘பாரதிராஜா’ குடும்பம்…கண்ணீரில் திரையுலகம்.!

தமிழ் சினிமாவின் கருப்பு நாள் தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமான பாரதிராஜா குடும்பத்தில் பெரும் துயர சம்பவம் நிகழ்ந்து,அனைவரையும் அதிர்ச்சியாக்கி,சோகத்தில்…

10 hours ago

தென்னிந்தியா பெஸ்ட்..அங்கே வாழ ஆசை..மும்பையில் சலசலப்பை ஏற்படுத்திய பாலிவுட் நடிகர்.!

பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல்,தென்னிந்திய சினிமாவை பாராட்டி,பாலிவுட் அந்தத் தரத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும், தென்னிந்தியாவில் குடியேறவும்…

11 hours ago

அதிர்ச்சி…! அண்ணாமலைக்கு எதிராக வழக்குப்பதிவு : ஆக்ஷன் எடுக்கும் சைபர் கிரைம்!

அண்ணாமலை மற்றும் ஹெச் ராஜா மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

11 hours ago

ஐபிஎல் ரசிகர்களே உஷார்.!நூதன முறையில் பணத்தை திருடும் மர்ம கும்பல்.!

சமூக வலைதளங்களில் டிக்கெட் மோசடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய விருந்தாக அமைந்து வரும் ஐபிஎல் தொடரை பார்க்க…

12 hours ago

விஜய் சார் படத்தோட போட்டி போட எனக்கு தகுதி இல்ல : வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்?

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட…

12 hours ago

This website uses cookies.