சென்னையில் தகாத உறவில் பழக்கம் ஏற்பட்ட பெண்ணை கள்ளக்காதலனே பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி அருகே கொள்ளுமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுதா. கடந்த 2014ம் ஆண்டு சுரேஷ் என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து தனியே வசித்து வந்தார்.
தனியார் கல்லூரி உணவகத்தில் சுதா பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு உடன் பணியாற்றிய செளந்திரபாண்டியன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் தனியாக வீடு எடுத்து ஒரு வருடமாக லிவ் இன் முறையில் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், சுதா மற்றும் சௌந்திரபாண்டியனுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டதால், செளந்திரபாண்டியனை விட்டு பிரிந்த சுதா, தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். சுதாவை காணாமல் தவித்து வந்த சௌந்திரபாண்டியன், ஆட்டோவில் சென்று தன்னுடன் வருமாறு சுதாவை அழைத்துள்ளார்.
அவர் மறுக்கவே, சுதாவை தன்னுடன் வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த சௌந்திரபாண்டியன், சுதா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், 60 சதவீத தீக்காயங்களுடன் சுதாவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் செளந்திர பாண்டியனை தேடி வருகின்றனர்.
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
This website uses cookies.