பொன்னமராவதியில் போக்சோவில் சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்தவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நரங்கியம்பட்டியை சேர்ந்தவர் பிரபு (28). இவர் போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து. கடந்த 30ஆம்தேதி ஜாமினில் வெளியே வந்த அவர். நேற்று திருமயம் மகளிர் காவல் நிலையத்தில் கண்டிஷன் பெயர் போட்டு வந்துள்ளார்.
ஜாமீனில் வெளியே வந்ததில் இருந்தே அவர் சோகமாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு திரும்பிவிட்டு வீட்டில் தூங்கியுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை திறந்து பார்த்த பொழுது, அவர் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார்.
உடனடியாக பொன்னமராவதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே பிரேதத்தை அரசு பாப்பாய் ஆட்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
போக்சோவில் சிறைக்குச் சென்று ஜாமினில் வெளியே வந்தவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொன்னமராவதி பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.