தமிழகம்

‘நீ ப்ளாக்குல சரக்கு விற்கனும்..’ போலீசே தற்கொலைக்கு காரணம்.. ராஜபாளையம் அருகே பரபரப்பு!

கள்ளத்தனமாக மது விற்க வேண்டும் என போலீசார் வற்புறுத்தியதாலே தான் தற்கொலை செய்து கொண்டதாக சிக்கிய கடிதத்தால் ராஜபாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள நக்கனேரி பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (40). விபத்தில் கைகளை இழந்ததால், இவர் 60 சதவீத மாற்றுத்திறனாளியாக இருந்தார். மேலும், இவர் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி வந்து, சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், இதற்காக காவல்துறையினருக்கும் அவ்வப்போது குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது. இருப்பினும், மாத இலக்குக்காக கள்ளத்தனமாக மது விற்பனை வழக்கின் பேரில், செல்வக்குமாரை அடிக்கடி போலீசார் கைது செய்துள்ளனர். இதனை அறிந்த ஊர் மக்கள், செல்வக்குமார் இனி மது விற்பனையில் ஈடுபடக் கூடாது என கட்டுப்பாடு விதித்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே, அவர் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யாமல் வேறு ஒரு வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்த நிலையில், சேத்தூர் ஊரக காவல் நிலைய தலைமைக் காவலரான செல்வின், செல்வக்குமாரை கள்ளத்தனமாக மது விற்பனை செய்யச் சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால், அதற்கு செல்வக்குமார் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் 22ஆம் தேதி, தான் அருந்துவதற்காக செல்வக்குமார் மதுபாட்டில்கள் வாங்கிக் கொண்டு தனது ஸ்கூட்டரில் ஊர் திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டருகே செல்வக்குமாரை தடுத்து நிறுத்திய காவலர் செல்வின், அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது.

அப்போது, இதனை வீடியோ எடுக்க முயன்ற செல்வக்குமாரின் மனைவியையும் தாக்கியதோடு, பாலியல் ரீதியில் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று செல்வக்குமாரின் மனைவி வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த செல்வக்குமார், தற்கொலை செய்யும் முடிவெடுத்து, தன் சாவுக்குக் காரணம் காவலர் செல்வின் தான் எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இதையும் படிங்க: எங்க ஓடவா பார்க்க.. டிரோன் மூலம் விரட்டிய கிராம மக்கள்.. செங்கல்பட்டில் மிரட்டிய சம்பவம்!

பின்னர், இது குறித்த தகவல் அறிந்த போலீசார் விசாரணைக்கு வந்தபோது, அவர்களைத் தடுத்து நிறுத்திய உறவினர்கள், திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, குற்றம் சாட்டப்பட்ட காவலர் செல்வின் மீது நடவடிக்கை எடுக்காமல், செல்வக்குமாரின் உடலை எடுத்துச் செல்ல விடமாட்டோம் எனக் கூறி தடுத்துள்ளனர்.

அப்போது, சமரசம் பேசிய சரக காவல் துணை கண்காணிப்பாளர் ப்ரீத்தி, உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்ததையடுத்து, செல்வக்குமாரின் உடல் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

12 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

12 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

13 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

14 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

15 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

17 hours ago

This website uses cookies.