கோவை பீளமேடு பகுதியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து மின் விளக்கை எரிய விட்டு மர்ம நபர் செல்போன் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை பீளமேடு ஹோப் காலேஜ் மசக்காளிபாளையம் சாலையில் தினேஷ் பாபு என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு இன்று காலை கடையை திறக்க வந்து பார்த்தபோது, கடையில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதனை அடுத்து கடைக்குள் சென்று கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் இரு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்த நிலையில், ஒரு நபர் இருச்சக்கர வாகனத்திலேயே நின்று விட, மற்றொரு நபர் கடையின் முன்பக்க சிசிவிடி காமிராவை மேல்புறமாக திருப்பி உள்ளார்.
மேலும், கடையில் பூட்டை உடைத்த மர்ம நபர் கடைக்குள் நுழைந்து மின்விளக்கை ஆன் செய்து சாவகாசமாக செல்போனை திருடிச்சென்றுள்ளார். இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தினேஷ் பாபு பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் சூர்யாவை வைத்து இயக்கியுள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.