கோவை பீளமேடு பகுதியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து மின் விளக்கை எரிய விட்டு மர்ம நபர் செல்போன் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை பீளமேடு ஹோப் காலேஜ் மசக்காளிபாளையம் சாலையில் தினேஷ் பாபு என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு இன்று காலை கடையை திறக்க வந்து பார்த்தபோது, கடையில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதனை அடுத்து கடைக்குள் சென்று கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் இரு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்த நிலையில், ஒரு நபர் இருச்சக்கர வாகனத்திலேயே நின்று விட, மற்றொரு நபர் கடையின் முன்பக்க சிசிவிடி காமிராவை மேல்புறமாக திருப்பி உள்ளார்.
மேலும், கடையில் பூட்டை உடைத்த மர்ம நபர் கடைக்குள் நுழைந்து மின்விளக்கை ஆன் செய்து சாவகாசமாக செல்போனை திருடிச்சென்றுள்ளார். இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தினேஷ் பாபு பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.