தமிழகம்

2 மகன்களுடன் கிணற்றில் குதித்த தாய்… 3 மணி நேரமாக கயிற்றில் சிக்கி போராடிய 6 வயது சிறுவன்!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இனுங்கூர் ஊராட்சி கீழ சுக்காம்பட்டியை சேர்ந்தவர் லாரி டிரைவர் அருண் 30. இவருக்கு லட்சுமி என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர்.

முதல் மகன் தர்ஷன் (6) இரண்டாவது மகன் நிஷாந்த் 4. அருண் தனது குடும்பத்தினருடன் தற்போது மேலசுக்காம்பட்டியில் உள்ள சுப்ரமணி என்பவர் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை தனது இரு மகன்களை தோட்டத்தில் உள்ள கிணற்றில் தள்ளிவிட்டு தானும் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதில் லெட்சுமி மற்றும் மற்றும் நிஷாந்த் நீரில் மூழ்கி பலியாகினர். தர்ஷன் மட்டும் கிணற்றின் மோட்டார் தொங்கவிட்ட கயிற்றினை பிடித்து தப்பியுள்ளார்.

3 மணி நேரமாக கயிற்றினை பிடித்தவாறு கூச்சலிட்டு வந்துள்ளார். அப்போது அருகில் வசிக்கும் நபர் எதேர்ச்சையாக கூச்சலிடும் சத்தம் கேட்டு கிணற்றில் வந்து பார்த்தபோது தர்ஷன் கயிற்றை பிடித்தவாறு இருந்ததை கண்டு அருகில் இருந்தவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

மேலும் இது குறித்து திருச்சி தீயணைப்புத் துறையினர் மற்றும் குளித்தலை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிறு காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட தர்ஷன் அருகிலுள்ள இனுங்கூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் படிக்க: குழந்தையை வைத்து ஆபத்தான முறையில் ரீல்ஸ்.. பதை பதைக்க வைத்த வீடியோ!

மேலும் கிணற்று நீரில் மூழ்கிய லட்சுமி மற்றும் நிஷாந்த் ஆகிய இருவரையும் இறந்த நிலையில் சடலமாக முசிறி தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

இருவரது உடல்களையும் கைப்பற்றிய குளித்தலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவன் மனைவியிடையே குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

9 hours ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

10 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

11 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

11 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

13 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

13 hours ago

This website uses cookies.