தமிழகம்

வீட்டுக்குள் திடீரென நுழைந்த கும்பல்.. பெண்ணையும் விட்டு வைக்கவில்லை.. சென்னையில் கொடூரம்!

சென்னை, காசிமேடு பகுதியில் வீடு புகுந்த கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை: சென்னை, காசிமேடு திடீர் நகர் 3வது தெருவில் வசித்து வருபவர் லோகநாதன் (33). இவர் மீது ஏற்கனவே காசிமேடு மீன்பிடித் துறைமுக காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், வீட்டில் லோகநாதனும், அவரோடு சேர்ந்து வாழ்ந்து வரும் மாலதி (48) என்ற பெண்ணும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.

அப்போது, திடீரென வீட்டில் உள்ளே நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல், லோகநாதனை சரமாரியாக வெட்டி உள்ளது. மேலும், உடனிருந்த மாலதியையும் சரமாரியாகத் தாக்கியதில் அவர் நிலை குலைந்து கீழே விழுந்தார். இதனையடுத்து, அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினரைக் கண்ட மர்ம கும்பல், தப்பி ஓடி உள்ளனர்.

இதனையடுத்து, இது குறித்து அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாலதியை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், உயிரிழந்த லோகநாதனின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பான விசாரணையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, அதே பகுதியில் தேசியா என்ற ரவுடி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: வெளுத்து வாங்கும் மதகஜராஜா…. காணாமல் போன பிரம்மாண்ட இயக்குனர்…!

அப்போது அந்த வழக்கில் லோகநாதன் பெயரும் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தேசியாவின் உறவினர்கள் யாரேனும் இதில் ஈடுபட்டார்களா அல்லது வேறு நபர்கள் யாரேனும் கொலை செய்தார்களா என்ற கோணத்தில் காசிமேடு மீன்பிடித் துறைமுக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

9 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

9 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

10 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

10 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

10 hours ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

11 hours ago

This website uses cookies.