கண்டெய்னர் லாரியில் சிக்கி வேரோடு பெயர்ந்து விழுந்த வேப்பமரம்.. வழக்குப்பதிவு செய்த போலீசார்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புத்தூரில் கழுகுமலையிலிருந்து கோவில்பட்டி நோக்கி தீப்பெட்டி பண்டல்களை ஏற்றி வந்து கொண்டிருந்த கண்டைனர் லாரி எதிரே வந்த பேருந்திற்கு வழி விடுவதற்காக ஒதுக்கிய போது மரத்தின் கிளை கண்டெய்னர் லாரியில் சிக்கி வேரோடு சாய்ந்தது.
இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இச்சாலை தென்காசி, சங்கரன்கோவில், கோவில்பட்டி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும் சாலை என்பதால் எப்போதுமே போக்குவத்து அதிகரித்தே காணப்படும் மரம் ரோட்டில் விழாமல் கண்டைனர் மீதே விழுந்ததால் ஆபத்து ஏதும் நேர வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுனரான குமாரகிரி கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி முத்துவின் மகன் மரிய மைக்கலை விசாரணை செய்து வருகின்றனர்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.