அரசு ஆரம்ப சுகாதார நிலையம் : தடுப்பூசி போட பச்சிளம் குழந்தைகளை தூக்கி வரும் பெற்றோர் – அலைக்கழிக்கும் செவிலியர்களின் வீடியோ காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை செல்வபுரம் பத்ரகாளியம்மன் கோவில் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்துக்கு பச்சிளம் குழந்தைகளை தூக்கிக் கொண்டு தடுப்பூசி போட வரும் தாய்மார்களை அங்கு உள்ள செவிலியர்கள் அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது.
ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த செவிலியர், சுகாதார மையத்தில் இல்லாமல் வேறு இடங்களில் இருக்கும் பொழுது அந்த இடத்திற்கு தடுப்பூசி போட குழந்தைகளை தூக்கி வர சொல்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி கைவசம் இல்லை எனவும், சுகாதார மையத்தின் செவிலியர் இருக்கும் இடத்தில் ஊசி இருப்பதாகவும் கூறி ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை அலை கழிப்பதாக கூறப்படுகின்றது.
தடுப்பூசி போட குழந்தையை தூக்கிக் கொண்டு வந்த நபர் ஒருவர் இந்த காட்சிகளை செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார். இந்த காட்சிகள் வைரலாகி வருகின்றது. பச்சிளம் குழந்தைகளை தூக்கி வந்த பெற்றோர்,
ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே மருந்து இல்லை என சொல்கின்றனர் என ஆதங்கத்தை தெரிவிக்கும் காட்சிகள் அதில் இடம்பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.